என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
    • கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வரை அதிகரித்த நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×