என் மலர்

    பைக்

    உலகளவில் 50 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி- வரலாற்று சாதனை படைத்த ஹோண்டா
    X

    உலகளவில் 50 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி- வரலாற்று சாதனை படைத்த ஹோண்டா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகளவில் 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.
    • 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது.

    ஹோண்டா மோட்டார் நிறுவனம் 1949ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களின் உலகளாவிய உற்பத்தியில் 50 கோடி (500 மில்லியன்) யூனிட்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஹோண்டா நிறுவனம், உலகளவில் 23 நாடுகளில் உள்ள 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த மைல்கல் 2025 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

    குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலையில் இந்த 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சாதனைக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.

    இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) 7 கோடி (70 மில்லியன்) யூனிட்களை உற்பத்தி செய்து, உலகளவில் ஹோண்டாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக விளங்குகிறது.

    குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலை உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி மையமாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 26.1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஹோண்டா இருசக்கர வாகன ஆலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக ஹோண்டா ரூ.920 கோடி முதலீடு செய்து 4வது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இது கூடுதலாக 6.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும்.

    இந்தியாவில் 2001ம் ஆண்டு ஆக்டிவா ஸ்கூட்டருடன் தனது பயணத்தைத் தொடங்கிய ஹோண்டா, 6 கோடி உள்நாட்டு விற்பனையை எட்டியுள்ளது.

    இந்த சாதனை, இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டாவின் ஆதிக்கத்தையும், உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×