தமிழ்நாடு செய்திகள்

4 நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை: நீலகிரி கலெக்டர்
- 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
- 22.04.2025 முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர் ஆகிய 4 நுழைவு வாயில்களில் மட்டும் பின்பற்றப்படும்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதி மன்ற உத்திரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தற்போது 07.04.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும்
1. கல்லாறு, 2. குஞ்சப்பணை, 3. மசினகுடி, 4. மேல்கூடலூர்
இந்த நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story