தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்: கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
- உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் வழங்கப்பட்ட உணவை அருந்திய நிலையில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் உணவு சமைக்க, குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





