தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது
- ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
- துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.
இந்த நிலையில் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story