என் மலர்

    உலகம் (World)

    மோடியை சந்தித்த 3 நாட்களில் விரிசல்..  ஆதாரம் கொடுத்தும் அடம்பிடிக்கும் இந்தியா - ட்ரூடோ தாக்கு
    X

    மோடியை சந்தித்த 3 நாட்களில் விரிசல்.. ஆதாரம் கொடுத்தும் அடம்பிடிக்கும் இந்தியா - ட்ரூடோ தாக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.
    • இதுதொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர்.

    காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து கனடா- இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் வெடிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி லாவோஸ் நாட்டில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்பில் கனடா மக்களின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் பேசியதாக ட்ரூடோ தெரிவித்தார்.

    ஆனால் அவர் அப்படி எதுவும் மோடியிடம் பேசவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்துள்ளதாகக் கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது நிலைமையை இன்னும் மோசமடைய வைத்துள்ளது. அதாவது, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    நிலைமை இப்படி இருக்க இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூடோ ஓட்டோவாவில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசியதாவது, இந்தியாவின் செயல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாததாக உள்ளது.

    கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான கொலை, வன்முறை சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயலைகளை ஆதரித்து இந்திய அரசு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இந்த குற்றங்களுக்கு இந்திய அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர். ஆனாலும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் ட்ரூடோ விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கனடா அரசு தெரிவித்திருக்குறது.

    Next Story
    ×