என் மலர்

    கனடா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தேர்வாகினர்.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் கியோ ஹான்யூ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரிவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐநா சபையின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம்
    • பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், இங்கிலாந்து அறிவித்து உள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக கனடா, மால்டா ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது:-

    "மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும். இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம்.

    இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டு உள்ளது. ஐ.நா சபையில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கும் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம்.

    அங்கு 2026-ம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும். அதில் ஹமாஸ் அமைப்பு எந்தப் பங்கையும் வகிக்க கூடாது. மேலும் பாலஸ்தீன அரசை ராணுவமயமாக்க வேண்டும்" என்றார்.

    மால்டா வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் கட்டஜார் கூறும்போது, "பாலஸ்தீன மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை மால்டா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இரு நாடு தீர்வு என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    இதனால் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கொள்கைரீதியான முடிவை மால்டா அரசாங்கம் எடுத்துள்ளது" என்றார்.

    பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடந்த முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் அரினா அர்செனால்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து நம்பர் 2 வீரரான அல்காரஸ் விலகி உள்ளார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2023ம் ஆண்டில் கனடா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமானப் பயிற்சியின் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதின.
    • இந்த விபத்தில் இந்திய மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

    டொரண்டோ:

    கனடா நாட்டின் மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.

    நேற்று முன்தினம் இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாரா விதமாக 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்தில் சிக்கியது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில் ஸ்ரீஹரி, சவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள்.
    • இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    ஒட்டாவா:

    கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:

    வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.

    இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

    இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.

    இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரின் பகல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்க ஜி-7 தலைவர்களை வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் நிற்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக, உலகம் அதன் அணுகுமுறையில் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப் பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் விதிக்க முயன்றாலும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை பயன்படுத்த கூடாது.

    உலகளாவிய தெற்கு நாடுகள் நிச்சயமற்ற தன்மை மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி தொடர்பான நெருக்கடிகளால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கிற்கு கொண்டு வருவதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. இந்த பிரச்சினையை ஜி-7 நாடுகள் இன்னும் தீவிர மாகக் கையாள வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-கனடா உறவு மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

    மேலும் இந்தியா-கனடா இடையே தூதரக உறவை பலப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியா-கனடா இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

    கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது.
    • சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

    ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான நேற்று நேற்று வெளியிடப்பட்டது.

    அதில், "மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.

    பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்.

    சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்" என்று கூறப்பட்டிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
    • பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார்.

    கடைசி நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன். முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    மற்றொரு பதிவில், "உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.

    ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்புகளில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    ×