என் மலர்

    உலகம்

    பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை இந்தியாவும் உணர்ந்துள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
    X

    பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை இந்தியாவும் உணர்ந்துள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
    • அப்போது இஸ்ரேலைப் போல் இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன்.

    நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.

    இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை நீண்ட காலமாக உணர்ந்துள்ளது. இஸ்ரேலியர்கள் உள்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்கிறோம்.

    உங்களைப் போலவே எங்களுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடு இல்லாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையுள்ளது.

    காசா அமைதித்திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் யூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×