என் மலர்

    இஸ்ரேல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
    • இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.

    சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

    டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

    பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.

    இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசா சிட்டியை போர் மண்டலாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ளது.
    • 2023 அக்டோபர் மாதம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளது.

    காசா சிட்டியில் இருந்து இரண்டு பயணக்கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார். காசா சிட்டி மீது தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேல் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். உயிரிழந்த சிலரின் உடல்களையும் கடத்திச் சென்றனர்.

    அப்போது உயிரிழந்த இலான் வெய்ஸ் என்பவரின் உடலும், மற்றொரு அடையாளம் தெரியாத உடலும் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இலான வெய்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டன. 2023 நவம்பர் மாத போர் நிறுத்தத்தின்போது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    தற்போது ஹமாஸ் அமைப்பிடம் 50 பேர் பிணைக்கைதிளாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், பணயக்கைதி ஒருவர் உடல் மெலிந்த நிலையில், சுரங்கத்தில் குழி தோண்டுவதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

    காசா சிட்டியை போர் பகுதியாக அறிவித்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் பசியால் உயிரிழந்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் வற்புறுத்தலாம் அத்தியாவசிய பொருட்கள் தற்போது கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போர்ப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லெபனான் ஐந்து மலைப் பகுதிகளை இஸ்ரேல் தன் கைவசம் வைத்துள்ளது.
    • ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாத நிராயுதபாணியாக்க லெபனான் அமைச்சரவை ஒப்புதல்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.
    • பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    காசாவில் ஏற்கனவே 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டார்.

    இந்த முடிவை உள்நாடு மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.

    இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது திட்டம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில் "நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கவில்லை. காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிப்போம். காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்போம். அமைதியான நிர்வாகத்தை நிறுவுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நமது மக்களை விடுவிப்பதற்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.

    இது எதிர்காலத்தில் காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் நீக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.
    • அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல.

    இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இந்த வரிவிதிப்பு பற்றி இருநாடுகளும் நல்ல முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேலுக்கு வருகை தந்த இந்திய பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசிய நேதன்யாகு, "பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.

    டிரம்புடன் கையாள்வது குறித்து மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இருப்பினும், அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நான் விரைவில் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன், உளவுத்துறை, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
    • காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.

    காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் பிரதமர் நேதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேதன்யாகுவின் ஐந்து கொள்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசா பகுதியை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல், மாற்று சிவில் அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலிய பணயக்கைதிகள் பிராஸ்லாவ்ஸ்கி மற்றும் எவியட்டர் டேவிட் ஆகியோரின் எலும்பும் தோலுமான காட்சிகளை ஹமாஸ் வெளியிட்ட பிறகு, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே காசாவின் 75 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம், பணயக்கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் பகுதிகள் உட்பட காசவில் மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.

    பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நேதன்யாகு, "எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கவும், அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்கவும் காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும், காசாவை நிரந்தரமாக வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை என்றும், அங்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவி, அதை முறையாக நிர்வகிக்கக்கூடிய அரபுப் படைகளிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைப்போம் என்றும் நேதன்யாகு விளக்கினார்.

    போருக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலின் உண்மையான நோக்கங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இதற்கிடையே உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நேற்று காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் நான்கு பேர் இறந்தனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
    • ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்தார்.

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரிட்டனை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரிட்டனிலும் அதுவே நடக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

    முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த முடிவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.
    • காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும்.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது.

    அக்டோபர் 7, 2023 (ஹமாஸ் தாக்குதல்) அன்று, உளவுத்துறை தோல்வி, ஈரான் தொடர்பான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமை உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாகும்.

    எனவே, எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் 50 சதவீத வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, காட் பயன்படுத்தப்படும். காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும். இது ஏமன் மற்றும் பிற அரபு பகுதிகளில் நுகரப்படுகிறது.

    இதன் காரணமாக, அவர்களின் பேச்சு தெளிவின்மை கொண்டது. வீரர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் காட் எடுக்கும்போது, அவர்களின் பேச்சும் அரேபியர்களைப் போலவே ஒலிக்கிறது. அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க ஒரு துறையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    தற்போது பொதுமக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் வகையிலும் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
    • இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது.

    மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    21 மாதங்களாக காசா உடனான போர் நடந்து வரும் சூழலில் இராணுவச் சேவை விலக்கு தொடர்பான இந்த விவாதம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது

    அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

    ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

    இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

    இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

    இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நேதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது. 

    ×