என் மலர்

    உலகம்

    கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - இந்திய தூதரகம் எச்சரிக்கை
    X

    கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - இந்திய தூதரகம் எச்சரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இந்நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், "கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கத்தார் அதிகாரிகளிடமிருந்து வரும் உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×