உலகம்

சர்வதேச தேநீர் தினம்: வாங்களேன் ஒரு டீ சாப்பிடலாம்.. தேயிலையை கண்டுபிடித்த சீன மன்னன் கதை தெரியுமா?
- தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும்.
- தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர்.
காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர்.
தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாக மாறிவிட்டது.
இஞ்சி டீ, சுலைமான் டீ, பிளாக் டீ தொடங்கி மசாலா டீ, லெமன் டீ என தேநீர் வகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர்.
தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. சுமார் 5,000 ஆண்டுகள் சீனப் பேரரசர் ஷென் நங் தற்செயலாக தேயிலையைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. அவரது ஆட்களுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து தண்ணீர் கொதிக்க வைக்கும்போது, காற்றில் பறந்த தேயிலை இலைகள் பானையில் விழுந்துள்ளது.
இது தண்ணீருக்கு சுவையூட்டிய நிலையில் அதுவே உலகின் முதல் தேநீர் பானம் என்றானது. அன்றுதொட்டு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் தேயிலை வளர்ப்பு உலகம் முழுவதும் பரவி உள்ளது.
தேயிலை வளர்ப்பு அதிகப்படியான பொருளாதார சந்தையாக மாறினாலும், இலங்கை, இந்தியா, மலேசியா என கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தை காரணமாக வைத்து தமிழர்கள் உட்பட பல இன மற்றும் மொழிக் குழுக்களை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த சரித்திரத்தையும் இந்நாளில் நினைவு கூற வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் மே 21 ஆம் தேதியை ஒரு புதிய சர்வதேச தேயிலை தினமாக அறிவித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15 ஆம் தேதி உலக தேநீர் தினமாக தனியே அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.