பைக்

பைக் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய சுசுகி... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
- இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
- அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர்பைக் மாடல்களில் ஒன்று ஹயபுசா. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஹயபுசா விலை இந்திய சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 மாற்றத்திற்கு பிறகு ஹயபுசா மாடலின் விலையை ரூ. 1.16 லட்சம் உயர்த்த சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹயபுசாவின் பழைய விலை சுமார் ரூ. 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த விலை உயர்வால், இந்த சூப்பர் பைக் ரூ. 18.06 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் சூப்பர்பைக் மாடல் சுசுகி ஹயபுசா ஆகும். ஸ்டைலிங், அதிக செயல்திறன் மற்றும் அதீத வசதி ஆகியவற்றின் கலவையானது இந்த மோட்டார் சைக்கிளை சுசுகிக்கு அதிகம் விற்பனையாகும் பைக்காக மாற்றியுள்ளது.
ஆனால் இந்த ஜிஎஸ்டி உயர்வால், இந்த சூப்பர் பைக் விற்பனை குறுகிய காலத்தில் மந்தநிலையை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. எனினும், ஹயபுசா ஒரு பிராண்டு என்பதால் அதற்கென மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். காலப்போக்கில், ஒட்டுமொத்த விற்பனை ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்திற்கு வரலாம்.