என் மலர்

    கார்

    நவம்பர் வெளியீட்டுக்கு ரெடியாகும் ஸ்கோடா கார்... வெளியான புது தகவல்
    X

    நவம்பர் வெளியீட்டுக்கு ரெடியாகும் ஸ்கோடா கார்... வெளியான புது தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.

    காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    Next Story
    ×