என் மலர்

    சினிமா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அஹானா கிருஷ்ணன்.
    • இவரது தங்கை தியா கிருஷ்ணன் இன்ஸ்டா பிரபலம் ஆவார்.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அஹானா கிருஷ்ணன். இவர் பல பிரபல மலையாள திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவரது தங்கை தியா கிருஷ்ணன் இன்ஸ்டா பிரபலம் ஆவார். அவர் ஓ பை ஓஸி {Oh By Ozy} என்ற கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் வேலைப்பார்த்த மூன்று பெண்கள் தியாவிற்கு தெரியாமல் பெரிய பண திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

     

    திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பெண்களும் கடையில் உள்ள பணம் செலுத்தும் க்யு ஆர் கோடை அவர்களது சொந்த வங்கியின் க்யூ ஆர் கோட்-உடன் மாற்றி வைத்து இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக அஹானா அந்த மூன்று பெண்களை வைத்து வாக்குமூலம் வாங்கி அதனை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

     

    அதில் அவர்கள் முதலில் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கின்றனர். திருடிய பணத்தை குறிப்பிட்ட காலத்தில் கொடுப்பதாக வாக்கும் கொடுக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு பிறகு அஹானா குடும்பத்தை எதிர்த்து பொய் வழக்கை இந்த மூன்று பெண்களும் சுமத்துகின்றனர். உண்மை எது என உறக்க சொல்லதான் இந்த வீடியோ எடுத்து அஹானா வெளியிட்டுள்ளார். இதனால் தன் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை துடைக்க இவ்வாறு அவர் செய்துள்ளார்.

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
    • சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது

    மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்யாணி இதுவரை நாம் பார்த்திராத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இப்படம் பல பாகங்களில் ஒரு சினிமாடிக் யூவினர்சில் உருவாக இருக்கிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார்
    • ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. தற்பொழுது இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகன் யாரென்று பேச்சு வார்த்தை நடப்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா.
    • கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை மாலை 6.03 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார்.
    • மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மேலும்மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.

    இந்த படங்களை தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.

    இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. 


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).
    • இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

    இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் வெளியாக இன்னும் 90 நாள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
    • இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் " இப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது, காளி வெங்கடின் நடிப்பு பிரமாதம். இந்த அற்புதமான திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்" என கூறியுள்ளார்.

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.
    • OG திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
    • இந்நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

     இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதன் புகைப்படத்தை படக்குழு வெளியிடுள்ளது, படத்திற்கான பின்னணி வேலைகள் முழு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் மலர்ந்தது.
    • நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

    பிரபல நடிகை சமந்தா தனது முதுகில் குத்தியிருந்த 'YMC' டாட்டூ காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

     தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த 'ஏ மாயா சேசாவே' (YMC) திரைப்படத்தின் நினைவாக இந்த டாட்டூவை அவர் குத்தியிருந்தார்.

    சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த டாட்டூ இல்லாததால், அதை அவர் நிரந்தரமாக நீக்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சமந்தா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மெரூன் நிற முதுகு இல்லாத உடையணிந்து "மறைக்க எதுவுமில்லை" என்று ஸ்க்ரீனில் எழுதினார். ஆனால், ரசிகர்களின் கவனம் அவரது மேல் முதுகில் இருந்த 'YMC' டாட்டூவின் மீது விழுந்தது. டாட்டூ தெரியாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

    நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "சமந்தா தனது YMC டாட்டூவை அகற்றிவிட்டார்" என்று ஒருவர் கூற, மற்றொருவர் "விளம்பரப் படப்பிடிப்பிற்காக மேக்கப்பால் மறைத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.

    விவாகரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சமந்தா இந்த டாட்டூவை அகற்ற முடிவு செய்திருக்கலாம் என பலர் நம்புகின்றனர்.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

    தற்போது, நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் டேட்டிங் செய்வதாக கிசு கிசுக்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
    • நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த நிலையில், தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். கணவருடன் வந்த நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.



    இதையடுத்து பேசிய நடிகை வரலட்சுமி, ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன். என் கணவருக்கு இதுதான் முதல்முறை. எங்களுடைய முதல் வருட திருமண நாள் வரப்போகிறது. அதற்காக வந்தோம். சாமி தரிசனம் செய்தது ரொம்ப நிம்மதியா, மன அமைதியா இருந்தது என்றார்.

    முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடிகை வரலட்சுமி தனது கணவருடன் ராகு-கேது பூஜை செய்து வழிபாடு செய்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண் பாவம் படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார்.
    • இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆண் பாவம் படத்தின் முதல் சிங்கிளான "ஜோடி பொருத்தம்" பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஜோடி பொருத்தம் பாடல் வரும் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ×