என் மலர்

    சினிமா செய்திகள்

    சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு..!
    X

    சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களையும் மனுவுடன் இணைதுள்ளார் துல்கர் சல்மான்.

    சொகுசு கார்களை பூடான் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகாரின் அப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூடான் வழியாக இந்தியாவுக்கு வரி செலுத்தாமல் காரை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் "சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார்.

    துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

    Next Story
    ×