சினிமா செய்திகள்

இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதையா? திருச்சி விழாவில் தனுஷ் பதில்
- இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதை என செய்திகள் பரவி வந்தன.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.
ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் இட்லி கடையின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வடசென்னை 2 ஆம் பாகம் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். 2027-ல் படம் ரிலீஸ் ஆகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று திருச்சியில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் தனுஷிடம் கேள்வி கேட்டனர்.
தனுஷிடம் கோபி "கோவை பக்கம் செஃப் ஒருவர் இருக்கிறார். அவருடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளீர்கள் என்கிறார்கள். உண்மையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தனுஷ் "அந்த மாதிரில்லாம் இல்லங்க. சொந்த கற்பனைதான். என் கிராமத்தில் பார்த்த ஒருசில காதாபத்திரங்கள் என மனச பாதித்தது. அதை பயன்படுத்தி சொந்தமான கதை. கற்பனைக் கதை. ஒரிஜினல் கதாபாத்திரங்கள்" எனப் பதில் அளித்தார்.
இட்லி கடை படத்தின் டிரைலர் கோவையில் வெளியான போது, தனுஷ் படத்தையும், மாதம்பட்டி ரங்கராஜ் படத்தையும் இணைத்து நெட்டிசன்கள், மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுதான் இட்லி கடை படம் எனத் தெரிவித்து வந்தனர்.