OTT

பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டரான இந்திய அனிமேஷன் திரைப்படம்: ஓடிடியில் வெளியான மகாவதார் நரசிம்மா
இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து படத்தை கொண்டாடினர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.
Next Story