என் மலர்

    பொது மருத்துவம்

    தலையில் சில இடங்களில் கொத்தாக முடி உதிர்கிறதா?
    X

    தலையில் சில இடங்களில் கொத்தாக முடி உதிர்கிறதா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும்.
    • பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும்.

    தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏறேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.

    இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

    'டீனியா கப்பைடிஸ்' என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.

    இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.

    இதற்கான சித்த மருத்துவம்: சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.

    பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று 'மாலசீயா'. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்து பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.

    தலையில் ஏற்படும் எக்ஸீமா என்னும் கரப்பானில் தோல் அழற்சி, அரிப்பு, சிறுசெதில் மற்றும் வீக்கத்துடன் இருக்கும். சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை என்பது ஒரு பொதுவான, நீண்டகால நாள்பட்ட நோயாகும். இதில் தலையில் செதில்கள், ஊறல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படும். இவற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள்:

    கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    அரிப்பு இருந்தால், கந்தக பற்பம் 200மி.கி., சிவனார் பற்பம் 200மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும். தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.

    Next Story
    ×