என் மலர்

    அழகுக் குறிப்புகள்

    Two in One... கடுக்காய் இருந்தால் போதும்...
    X

    Two in One... கடுக்காய் இருந்தால் போதும்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சுற்றுச்சூழல், சூரிய ஒளிகதிர்கள் மற்றும் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பது என பல்வேறு காரணங்களால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றி முகப் பொலிவையும் இழக்க நேரிடும். இதனால் வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் நமக்கே தோன்றிவிடும்.

    இழந்த சரும பொலிவை பெற எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிகவும் முக்கியமானது கடுக்காய் தான். கடுக்காய் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். ஃபேஸ் பேக்காக கூடவா போடலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் கடுக்காய் ஃபேஸ் பேக் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தையும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.

    கடுக்காய் ஃபேஸ் பேக் செய்முறை:



    ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.

    நீங்கள் கடுக்காய் ஃபேஸ் பேக் போடும் போதே கடுக்காய் ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம். நேரம் மிச்சமாவதோடு கூடுதல் பொலிவைப்பெறலாம்.

    கடுக்காய் ஹேர் பேக் செய்முறை:

    1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    Next Story
    ×