என் மலர்

    அரியானா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
    • பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன.

    சண்டிகர்:

    வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி கனமழையால் கடுமையாக பாதிப்பு அடைந்த பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு நிவாரண உதவியாக 5 கோடி ரூபாய் வழங்கினார்.

    இதுதொடர்பாக அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மிகவும் துயரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் அரியானா அரசாங்கமும், மாநில மக்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியாக நிற்கிறார்கள். முதல் மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு தலா 5 கோடி ரூபாய் உதவி அனுப்பப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
    • மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர்.

    அரியானா குருகிராமில் இன்று பிரபல யூடியூபரும் பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு தாக்கப்பட்டது.

    அதிகாலை 5:30 மணியளவில், குருகிராமில் உள்ள செக்டார் 57 இல் உள்ள எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இருப்பினும், எல்விஷ் யாதவ் அப்போது வீட்டில் இல்லை. எல்விஷின் வீடு கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் உள்ளது.

    சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

     இதில் வீட்டின் ஜன்னல்கள், கூரைகள் ஆகியவை சேதமடைந்தன.  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.
    • பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

    'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, இந்த ஆண்டு மே 16 அன்று அரியானா காவல்துறையினரால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது தொலைபேசி டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் டேனிஷ் அலியுடன் ஜோதி பல முறை பேசியுள்ளது இதில் கண்டறியப்பட்டது. டேனிஷ்  அதே மே மாதம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 

    இந்நிலையில் அரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.

    அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

    ஜோதி நீண்ட காலமாக பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்தியா குறித்த முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

    குற்றப்பத்திரிகையின்படி, "ஆரம்பத்தில், அவர் ஒரு சாதாரண யூடியூபராக வலைப்பதிவுகள் மற்றும் வீடியோக்களை உருவாக்கினார்.

    ஆனால் விசாரணையின் போது அவர் பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

    ஐஎஸ்ஐ முகவர்கள் என்று நம்பப்படும் ஷாகிர், ஹசன் அலி மற்றும் நசீர் தில்லான் ஆகியோருடனும் அவருக்கு தொடர்புகள் இருந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹிமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அடிக்கடி பரோலில் குர்மீத் ராம் ரஹீம் விடுக்கப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், மீண்டும் குர்மீத் ராம் ரஹீமூக்கு அரியானா அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அவருக்கு இது 3வது பரோல் ஆகும். தண்டனை பெற்ற 2020ம் ஆண்டு முதல் அவர் 14வது முறையாக பரோல் விடுப்பு (344 நாட்கள்) பெற்றுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    அரியானாவில் 30 வயது டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    டெலிவரி ஊழியர் விகல் சிங், அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடையில் டெலிவரி பாய் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதல் பார்வையில், அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    ஊர் மக்களின் போராட்டத்தை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. இது தவிர, இறுதிச் சடங்குகளுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹரியானாவில் நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
    • இன்று இரவு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அரியானா மாநிலத்தில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவானது. அரியானாவில் இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. அரியானாவின் ரோஹத் மற்றும் பகதுர்கார்க் மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.

    நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் ஜாஜ்ஜார் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி- என்சிஆர் பிராந்தியத்தில் உணரப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அளவிலான வீராங்கனையான ராதிகா யாதவ் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமையானதால் தந்தை கோபத்தின் உச்சியில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

    ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை. 25 வயதான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றுள்ளார. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிகிறது.

    அவரது தந்தை பலமுறை கண்டித்த போதிலும், ராதிகா ரீல்ஸ் அடிமையில் இருந்து மீளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் தனது மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஐந்து முறை சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து, ராதிகாவின் தந்தை பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
    • இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.

    சண்டிகர்:

    அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:

    வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.

    அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணியின் தங்கையை திருமணம் செய்ய வாலிபருக்கு விருப்பம்.
    • குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    அரியானாவில் அண்ணியின் தங்கையை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால், சகோதரி இருவரையும் வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஷீனு (25), ரீது (23). இருவரும் சகோதரிகள். ஷீனுவின் கொழுந்தன் (brother-in-law) சுனில். சுனிலுக்கு ரீதுவை திருமணம் செய்து கொள்ள விருப்பம். தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

    திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் சுனில் கோபம் அடைந்து ஷீனு மற்றும் ரீதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வரும் வழியில் இருவரையும் துப்பாக்கியல் சுட்டுள்ளார். இருவரும் படுகாயம் அடைந்து கீழே சரிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சுனில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் ரோஹத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பி ஓடிய சுனிலை போலீசார் தேடிவருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

    அரியானாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்தது தொடர்பாக கணவர், மாமியார், மாமனார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    2023-ம் ஆண்டு அருண் என்பவர் தனுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த ஓராண்டாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணவருடன் வாழ வந்துள்ளார். இருப்பினும் அருண் குடும்பத்தாரிடம் இருந்த பேராசை குறையவில்லை. மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இதனிடையே, தனுவை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பேச கணவன் வீட்டார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தே தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மாமியார் தனு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து, தனு குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக துணை காவல் ஆணையரை சந்தித்து தனு குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

    இதன்பின்னே, உண்மை வெளிவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 24 வயதான தனுவை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொன்று வீட்டின் அருகே பொதுப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் குழியில் புதைத்துள்ளனர். இதுதொடர்பாக தனுவின் கணவர், மாமனார், மாமியார், நெருங்கிய உறவினர் ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழியை தோண்டி தனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷீத்தல் நீரில் மூழ்கியதாக சுனில் நாடகமாடியுள்ளார்.
    • திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    அரியானாவில் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலின் பிரபலமுமான ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டார்.

    நேற்று (ஜூன் 16, 2025) சோனிபட் அருகே கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்த உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.

    முன்னதாக, தனது கார் கால்வாயில் விழுந்ததாகவும், ஷீத்தல் நீரில் மூழ்கியதாகவும் சுனில் நாடகமாடியுள்ளார். ஆனால், விசாரணையில் இந்த நாடகம் அம்பலமானது. இறுதியில் சுனில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    சுனிலுடன் காரில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஷீத்தலை சுனில் அடித்து, கத்தியால் குத்தி, பின்னர் காரை ஷீத்தலின் உடலுடன் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சுனில் திருமணமானவர் என்பதால், அவரது திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ×