என் மலர்

    மணிப்பூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான விபத்தில் 2 விமானி மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
    • மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமனப் பணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    விபத்தில் இரண்டு விமானிகள், 10 பணியாளர்களும் உயிரிழந்தனர். மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமான பணிப்பெண்கள் இதில் அடங்குவார்கள். அதில் ஒருவர் லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார்.

    மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவருடைய ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளது.

    லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

    தனது தாயாரிடம் வியாழக்கிழமை (விபத்து நடந்த நாள்) லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என புதன்கிழமை பேசியுள்ளார். அதன்பின்தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார்.

    இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார், சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் கிப்ஜென் தெரிவித்துள்ளார்.

    நேற்றிரவு விமானப் பணிப்பெண்ணின் தாயாராக்கு போன் செய்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

    மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (AT) என்ற மெய்தேய் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    "நாங்கள் ஆயுதங்களை திரும்ப வழங்கினோம், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம், இப்போது நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்களா?" என்று அவர்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டினர்.

    முன்னதாக தலைவர் கைதைக் கண்டித்து, சனிக்கிழமை இரவு டயர்களை எரித்து சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்பாலின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சனிக்கிழமை இரவு 11:45 மணிக்கு அமலுக்கு வந்தது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது.
    • ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

    நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் நடுவில் டயர்களை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த 2023 இல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்துள்ளார். 9 எம்.எல்.ஏ.க்களுடன் தொக்கோம் ராதேஷியாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார்.

    அதன்பின் தொக்கோம் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-

    மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாாக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    நாங்கள் சொன்னதை ஆளுநகர் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனுக்கான நடவடிக்கை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சபாநாயகர் தி. சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை.

    ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்தார்.

    எந்தவொரு சமாதான முன்னெடுப்பிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என மெய்தி பிரிவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குகி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெய்தி மக்களின் ஷிருய் விழா விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
    • பத்திரிகையாளர்களுடன் மாநில பேருந்தில் மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு.

    மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக அஜய் குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் டெல்லிக்கு சென்றிருந்தார்.

    இவருக்கு எதிராக மெய்தி சமூகத்தினர் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். இதனை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தியதுடன். கலைந்து செல்ல கண்ணீர் புகைக்குண்டு வீசியது பேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மெய்தி சமூகத்தினரின் ஷிருய் விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

    20ஆம் தேதி பத்திரிகையாளர்களுடன் சென்ற மணிப்பூர் மாநில அரசு பேந்தில், மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு மெய்தி சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், டெல்லி சென்றுள்ள கவர்னர் இம்பால் திரும்பி ராஜ் பவனுக்கு செல்லும் வழியில் போராட்ட பேரணி நடத்தவும், சாலைகளின் இருபுறமும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் அஜய் குமார் பல்லா இன்று இம்பால் திரும்பினார். அப்போது மெய்தி சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். அதை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தில் இருந்து ராஜ் பவன் சென்றார் ஆளுநர்.

    பேருந்தில் மணிப்பூர் பெயரை மறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "மணிப்பூர் அடையாளம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. மணிப்பூர் மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் மெய்தி மக்கள் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெய்தி சமூகத்தினர் தொடர்பான விழா வருகிற 20ஆம் தொடங்குகிறது.
    • குகி சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்களை கடந்து மெய்தி சமூகத்தினர் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவ்டத்தில் 5ஆவது மாநில அளவிலான ஷிருய் லில்லி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் மெய்தி சமூகத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என டெல்லி குகி மாணவர்கள் அமைப்பு தலைவர் பயோஜாகுப் கைதே மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முடிந்தவரை அவரை உடனடியாக கைது செய்யும்படி அருகில் உள்ள மாநிலங்களான மிசோரம், அசாம், நாகாலந்து, மேகாலயா மாநிலங்களுக்கு மணிப்பூர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ஷிருய் விழாவில் மக்கள் கலந்து கொள்ள போதுமான பாதுகாப்பை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

    "மெய்தி தங்குல் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ஷிருய் விழாவை நடத்த உள்ளனர். விழாவிற்கு வரும் எந்த மெய்தியும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உயிருடன் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது" என பயோஜாகுப் கைதே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஷிருய் விழா வருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேவை வரை நடைபெற இருக்கிறது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி- குகி சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் மெய்தி- குதி பிரிவினருக்கு இடையில் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
    • வன்முறை நடைபெற்று 2 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் போராட்டத்திற்கு வலியுறுத்தல்.

    மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.

    இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.

    மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.

    மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.

    இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.

    இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர்.
    • ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து வன்முறை நடைபெற்று வந்த நிலையில் முதல்வராக இருந்த பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இருந்தபோதிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி திரும்ப ஜனநாயக அரசை அமையுங்கள் என அமித் ஷாவுக்கு 13 பாஜக எம்.எல்.ஏ.-க்கள், 3 என்பிபி, 3 நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர். எனினும், ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.

    மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்ற உறுதியான அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. ஏராளமான அமைப்புகள் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியுள்னர்.

    ஒரு ஜனநாயக அரசு அமைப்பதற்கு உரிமை கோராததற்காகவும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயித்ததற்காகவும் ஆளும் எம்.எம்.ஏ.-க்களை குற்றம்சாட்டி பேரணிகள் நடத்தப்படுகின்றன.

    ஜனநாயக அரசு அமைப்பதன் மூலமாக மட்டுமே மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப முடியும் என உணர்கிறோம். மணிப்பூர் மக்களின் நலன் கருதி விரைவில் ஜனநாயக ஆட்சி அமைய உள்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.

    இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தங்கியுள்ள சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிய மணிப்பூர் காவல்துறை மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளதைக் கண்டறிய, சரிபார்ப்பு இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இம்பால் பள்ளத்தாக்கின் லிலாங், மினுதோங், குவாக்டா, மாயாங் இம்பால், சோரா, கைராங் போன்ற பகுதிகளிலும், உரிய விசாக்கள் அல்லது அரசின் நுழைவு அனுமதிச் சீட்டு (ILP) இல்லாமல் சட்டவிரோத வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் தங்கியிருப்பதாகச் சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

    அங்கீகரிக்கப்படாமல் வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் இருப்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகளால் உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
    • மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் வீடு எரிக்கப்பட்டது.

    முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.

    இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

     

    மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    குராய் குமிடோக் பஜாரில் இன்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக  இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

    மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதையும், பொதுமக்கள் துப்பாக்கிகள், வாள்கள், குச்சிகள், கற்கள் அல்லது பிற ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடைசெய்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவராக அஸ்கர் அலி உள்ளார்.
    • பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

    கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. இந்நிலையில் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பாஜக சிறும்பான்மை தலைவரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.

    மணிப்பூரில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவர் அஸ்கர் அலி நேற்று முன் தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் நேற்று கும்பல் ஒன்று பவம் தௌபல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளது.

    நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் தனது முந்தைய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

    முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

    போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இத்தகடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரிடையே நிகழ்ந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் சுமார் 260 பேர் வரை கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்டது, வன்புணர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட மனித குலத்திற்கே வெட்கக்கேடான கொடுமைகள் நடைபெற்றன.

    ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு ஓட வேண்டியிருந்தது. காவல்நிலையத்தில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் ஓய்ந்தபின்னும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.

    கடந்த வருட இறுதியில் மக்கள் போராட்டத்தால் மீண்டும் கலவரமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாநில ஆளும் பாஜக அரசு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல்வர் பைரன் சிங் ராஜிநாமாவால் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகின்றது. இந்நிலையில் குக்கி, மெய்தேய் குழு பிரதிநிதிகளை வைத்து கூட்டம் ஒன்றை மத்திய அரசு இன்று நடத்தியுள்ளது.

    ஆல் மணிப்பூர் யுனைடெட் கிளப்ஸ் ஆர்கனைசேஷன் (AMUCo) மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் சிவில் சொசைட்டி ஆர்கனைசேஷன் (FOCS) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆறு பேர் கொண்ட மெய்தேய் குழுவும், ஒன்பது பேர் கொண்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் உளவுத்துறைப் பணியகத்தின் ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    முன்னதாக மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,  மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியிருந்தார். மேலும் விரைவில் இரு குழுக்களையும் சேர்ந்து கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    ×