என் மலர்

    மணிப்பூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் நேற்றுதான் குடியரசுத் தலைவர் வாபஸ் வாங்கப்பட்டது.
    • பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

    மணிப்பூரில் புதிய அரசு அமைந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    சூரசந்த்பூர் மாவட்டத்தில் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க முயன்ற பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. 

    பிப்ரவரி 4 அன்று பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. யும்னம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி-ஜோ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர்கள் அரசில் இணைந்தது "துரோகம்" என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர்.

    மாலையில் போராட்டம் தீவிரமடைய துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலைகளை மறித்தனர். மேலும் குக்கி-ஜோ குழுக்களின் கூட்டமைப்பு நாளை குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் பிரிவினரும், மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று குக்கி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    மறுபக்கம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் பதவியேற்பு.

    மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.

    இம்பாலில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் முதல்வராக கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • தற்போது சட்டமன்ற பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க முயற்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்ததும், யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    குகி தலைவர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
    • வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.

    கடந்த 2023 இல் மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதில் இரு இனத்தவருக்கும் மோதல் ஏற்பட்ட வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.

    2023 மே மாதம் அங்கு பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்லவம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பல பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். அதில் ஒருவர் அண்மையில் உடல் நலம் மோசமடைந்து உயிரிழந்தார்.

    அவரை வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 2 வருடங்கள் கடந்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

    மறுபுறம் இரு இனத்தவர் இடையேயும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன நபர் கடத்திக் கொலை செய்யப்ட்டுள்ளார்.

    கொல்லப்பட்ட 38 வயதான மெய்தி இன இளைஞர் ரிஷிகாந்தா, மெய்தி மூகத்தினர் அதிகம் வாழும் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

    ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

    திருமணத்திற்குப் பிறகு, குக்கி சமூகத்தினர் அதிகம் வாழும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இனக்கலவரத்தின் முன் நேபாள் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற அவர் இந்த வாரம் ஊர் திரும்பியுள்ளார். 

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை, 'யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல்,  துய்புவாங் என்ற இடத்திலிருந்து ரிஷிகாந்தாவை கடத்திச் சென்றுள்ளது.

    கடத்தப்பட்ட ரிஷிகாந்தாவை நட்ஜங் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அந்தக் கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதை அந்த கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அந்த வீடியோவில் ரிஷிகாந்த்தா, தன்னை கொல்ல வேண்டாம் என கெஞ்சுவது பதிவாகி உள்ளது. 

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில் வைத்து இந்தப் பெண் கடத்தப்பட்டார்.

    ஒரு கும்பல் இவரைப் பிடித்துச் சென்று பல இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.

    படுகாயங்களுடன் இருந்த அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

    வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதியில் கடந்த ஜனவரி 10 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 2023 ஜூலை மாதம் FIR பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வழக்குத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒருவரைக் கூட சிபிஐ கைது செய்யவில்லை.

    "அந்தச் சம்பவத்திற்கு முன்பு என் மகள் மிகவும் துடிப்பாக இருப்பாள். ஆனால், அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவள் சிரிப்பதையே மறந்துவிட்டாள். யாரிடமும் பேசாமல் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள்" என்று அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

    பெண்ணின் மரணத்திற்கு குக்கி சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்ணுக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். 

    குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்ரோல் பங்கு மீது சமூக விரோதிகள் குண்டு வீச்சு.
    • குண்டு வீச்சு மூலம் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது- டீலர்கள் சங்கம்.

    மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மீது இரண்டு நாட்களுக்கு முன்னதாக குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் காலவரையின்றி மூடப்படும் என பெட்ரோலிய டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக டீலர்கள் சங்கம் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "பெட்ரோல் பங்க் மற்றும் டீலர்களின் பாதுகாப்பு விசயத்தில் மாநில அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூலம், இன்னும் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது.

    உடனடி கவனமும் சுமுகமான தீர்வும் வழங்கப்படும் வரை, பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இன்று முதல் காலவரையின்றி மூடுவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், அரசாங்கம் பொறுப்புடைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் மொய்ராங் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வன்முறையில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டனர்
    • மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது

    மே 2023 முதல் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் இடம்பெயர்ந்த 10,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.

    2025-26 மணிப்பூர் பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 573 கோடி மதிப்பிலான மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுவரை, 2,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 4000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. குடும்பங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு, மாநில காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து கிராமங்களில் பாதுகாப்புச் சாவடிகளை (security posts) அமைத்து வருவதாகவும் கோயல் கூறினார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறினர். இந்தாண்டு பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் வன்முறைகள் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

    மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.


    மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

    அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.

    இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.

    மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது. 


    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)

    இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.

    உயிரிழப்புகளும் சேதங்களும்:

    மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)


    கலவரத்தின்போது

    • இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
    • 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
    • 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
    • 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
    • சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
    • காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
    • இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.

    இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

    "உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார். 

    முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,

    "தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.

    தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
    • காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.

    வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
    • கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.

    வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
    • மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.

    * வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்

    * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

    * மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது

    * மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்

    * ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்

    * நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    * மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ×