என் மலர்

    மேற்கு வங்காளம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார்.
    • வாக்கு வங்கிக்காக அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டிவிட்டார்.

    கொல்கத்தா:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இருநாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளார்.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

    அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும்.

    முதல் மந்திரி மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

    முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே நமது ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இதன்மூலம் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரியரை அவர் அவமதித்துள்ளார்.

    வரும் சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட மேற்கு வங்க தாய்மார்கள் மற்றும் சகோதரியர் தயாராகி விட்டனர். 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார். தன் ஓட்டு வங்கிக்காக, அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார் என தெரிவித்தார்.

    மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
    • வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி ஐந்து சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் உண்மை குறித்து பேசுவோம்.

    பெண்களுடைய பாதுகாப்பு?

    உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.

    இளைஞர்கள் நம்பிக்கையின்மை?

    வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

    ஊழல்?

    உங்கயுடைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமினில் உள்ளனர். நீதி மெல்ல மெல்லி செத்துக் கொண்டிருக்கிறது.

    அரசியல் கால்ப்புணர்ச்சியால் உங்களுடைய அரசாங்கம் மேற்கு வங்க அரசுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம், அவாஸ் யோஜனா நிதிகளை தர மறுக்கிறது.

    கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குழப்பத்தை முதலில் சரி செய்யுங்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, ​மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.
    • பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். இரண்டு இடங்களில் 1,010 கோடி ரூபாய் அளவிலான கியாஸ் வினியோய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசினார். மேலும் மம்தா தலைமையில் நடைபெறும் மேற்க வங்க அரசை கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி பேரணியில் பேசும்போது கூறியதாவது:-

    இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது.

    பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை (Sindoor) துடைக்க துணிந்தார்கள், ஆனால் நமது படைகள் அவர்களுக்கு குங்குமத்தின் வலிமையை உணர்த்தின. பாகிஸ்தான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை நாங்கள் அழித்தோம்.

    பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானால் உலகிற்கு வழங்குவதற்கு சாதகமானது எதுவும் இல்லை. பயங்கரவாதம், படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய நிபுணத்துவம்; போர் நடக்கும் போதெல்லாம் அவர்கள் தோல்வியை எதிர்கொள்கிறார்கள்.

    கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அட்டூழியங்களையும், அங்கு அது கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதத்தையும் யாராலும் மறக்க முடியாது. இந்த வங்காள மண்ணிலிருந்து, 140 கோடி இந்தியர்களின் சார்பாக, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று நான் அறிவிக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுக்கள் சென்றுள்ளபோது, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தை விமர்சித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.

    பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார். அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது.
    • தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது என்றார்.

    பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனார்.

    ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடைய இளைய மகனான தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காத்யாயினி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே, ராஜ்ஸ்ரீ 2வது முறை கர்ப்பமடைந்த நிலையில் அவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அதன்படி ராஜ்ஸ்ரீக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு பிறந்த குழந்தையை பார்க்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு வந்தார்.

    குழந்தையை பார்த்தப்பின் தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதியை சந்தித்து மம்தா வாழ்த்து கூறினார். ராஜ்ஸ்ரீ மற்றும் தேஜஸ்வியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.
    • அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை.

    மேற்கு வங்கத்தில், சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு தோப்புக்கரணம் போட வைக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் பன்சுரா பகுதியில் உள்ள கோசாய் பியர் பஜாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்தது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, ஏழாம் வகுப்பு மாணவரான கிருஷ்நேந்து தாஸ், சிப்ஸ் பாக்கெட் வாங்க உள்ளூர் கடைக்குச் சென்றான். கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித் அந்த நேரத்தில் அங்கு இல்லை.

    இறந்தவரின் தாய் கண்ணீருடன் போலீசாரிடம் கூறுகையில், "மாமா, நீங்கள் சிப்ஸ் எடுத்து தருகிறீர்களா?" என்று கிருஷ்ணேந்து கடைக்காரரை பலமுறை கூப்பிட்டதாக கூறினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை, அதனால் சிறுவன் சிப்ஸ் பாக்கெட்டுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

    சிறிது நேரத்தில் கடைக்குத் திரும்பிய உரிமையாளர் தீட்சித், சிறுவனைத் துரத்திச் சென்று பிடித்தார். அவன் எல்லோர் முன்னிலையிலும் கிருஷ்நேந்துவை கன்னத்தில் அறைந்து காலால் உதைத்தார். பின் அவனை அனைவர் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட வைத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.

    கடையின் முன் கிடந்த சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் தான் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு பணம் செலுத்த இருந்ததாகும் சிறுவன் கூறினான். ஆனால் கடைக்காரர் அவரை நம்பவில்லை, அவன் பொய் சொன்னதாக குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்து அவமானப்படுத்தப்பட்ட கிருஷ்நேந்து தனது தாயுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். நீண்ட நேரமாகியும் கிருஷ்நேந்து வெளியே வராததால், அவரது தாயார் சந்தேகமடைந்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கிருஷ்நேந்து மயக்கத்தில் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதைக் தாய் கண்டார்.

    சிறுவனுக்கு அருகில் பாதி காலியான பூச்சிக்கொல்லி டப்பாவும், அவன் வங்காள மொழியில் எழுதிய ஒரு கடிதமும் இருந்தன.

    "அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை. திரும்பி வரும் வழியில் சாலையில் ஒரு குர்குரே பாக்கெட் இருப்பதைக் கண்டு அதை எடுத்துக்கொண்டேன்.

    எனக்கு குர்குரே மிகவும் பிடிக்கும். இவைதான் என் கடைசி வார்த்தைகள். என்னை மன்னியுங்கள்" என்று அந்தக் கடிதத்தில் சிறுவன் கிருஷ்ணேந்து எழுதியிருந்தான். கிருஷ்ணேந்து தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் கடை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் மீது 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு.
    • உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள முக்கியமான இடங்களில் 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால், உளவு பார்ப்பதற்கான அனுப்பப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலாவில் இருந்து டிரோன் போன்ற மர்மப் பொருட்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகர் கடலில் உள்ள 2-ஆவது ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் தலைமையகம், ஹேஸ்டிங்ஸ் போன்ற இடங்களில் இந்த மர்மபொருள் பறந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானுக்காக உளவு பணியில ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார்.
    • கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது.

    தேநீர் பிரியர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ வழக்கமான தேநீர் அரட்டைகளைத் ஒருபோதும் தவறவிட விரும்புவது இல்லை. தேநீர் மற்றும் தேநீர் குடித்தபடியே அரட்டை அடிப்பது என இந்த இரண்டும் அவர்களுக்கு ரொம்ப முக்கியம்.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் ஒரு டீக்கடை கடைக்காரர் இல்லாமல் இயங்கி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம் சம்பூரில் உள்ள ஒரு சந்தில் அமைந்துள்ள இந்த சிறிய டீக்கடை ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. இது சம்பளம் வழங்குவதில்லை. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற கப் டீயை வழங்கி உள்ளது. 

    தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார். காலை முதல் மாலை 7 மணி வரை பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உள்ளூர்வாசிகள் என கடைக்கு வரும் எல்லோரும் மாறி மாறி பார்த்துக்கொள்கின்றனர்.

    கடைக்கு வருபவர்களே தேநீர் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள், பணம் வசூலிக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு ரூபாயை கூட எதிர்பார்க்காமல் செய்கிறார்கள்.

    கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது. எனினும், அவர்கள் குடித்த டீக்கான பணத்தை அங்குள்ள பணப்பெட்டியில் தவறாமல் போட்டுவிடுகிறார்கள்.

    இது முழுக்க முழுக்க நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் இயங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
    • பூஞ்ச், ரஜோரி பகுதிகள் பாகிஸ்தான் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையை 7ஆம் தேதி நள்ளிரவு மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

    அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மதியம் வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வாழும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியத்ததுடன், கடுமையான பதிலடி கொடுத்தது.

    குறிப்பாக 7ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு ராணுவ வீரர், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. குழு வருகிற 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறது.

    இந்த குழுவில் தெரிக் ஓ'பிரையன், சகாரியா கோஸ், முகமது நதிமுல் ஹக் ஆகிய எம்.பி.க்கள் மற்றும் மேற்கு வங்க மாநில அமைச்சர் மனாஸ் புனியா, முன்னாள் எம்.பி. மமதாக தாகூர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

    மம்தா பானர்ஜியின் வழிகாட்டுதலின்படி ஐந்து பேர் கொண்ட குழு ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி செல்லும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணையமைச்சர் ஆனார்.
    • 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2019 தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் ஜான் பார்லா. இவர் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர். பாஜக தலைவர் இவர் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கடசியில் இணைந்தது குறித்து ஜான் பார்லா கூறியதாவது:-

    நான் பாஜகவில் இருந்தபோது பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக என்னை பணியாற்ற அனுமதிக்கவில்லை. மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ், பழங்குடியின மக்களுக்கான நியாயத்தை என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு ஜான் பார்லா தெரிவித்தார்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் ஜான் பார்லா அலிப்பூர்துவார்ஸ் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024ஆம் ஆண்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார். அவருக்குப் பதிலாக மேற்கு வங்க சட்டமன்ற பாஜக தலைமை கொறடாவாக இருநது மனோஜ் திக்கா நிறுத்தப்பட்டார். இவர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

    இதனால் பாஜக மேலிடம் மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியிருந்தார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார்.

    கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சுனில் நரைனை ஸ்டம்பிங் செய்தார். தொடர்ந்து, அங்கிரிஷ் ரகுவன்ஷியின் கேட்சை பிடித்தார். இதன்மூலம் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இதில் 153 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டம்பிங் அடங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தோனி, எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

    ×