என் மலர்

    ஈரான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் ஈரான் தாக்கியது.
    • இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.

    இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன.

    இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" (Operation True Promise) என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்தனர்.

    இன்று (சனிகிழமை) அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.

    டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன, மத்திய இஸ்ரேல் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன.

    இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்.
    • முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஈரான் மீது வான்தாக்குதல் நடத்தியது. ஈரானிய புரட்சிகர காவல்படை தலைமையகம் மற்றும் தெஹ்ரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் தளபதி அமீர் அலி ஹஜிஜதே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இவர் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத்தின் தளபதியாக இருந்தார். பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்குகளை மேற்பார்வையிடும் படைகளின் முக்கிய கமாண்டராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    • மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.

    ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும் அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

    இந்நிலையில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் பகுதியளவு இடிந்து விழுந்த கட்டிடங்களின் படங்கள் வெளியாகி வருகின்றன.

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

    இந்த சூழலில், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி எச்சரித்துள்ளார்.

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கை மீண்டும் ஒரு போர் போன்ற அச்ச நிலைக்குத் தள்ளுகிறது.

    இதற்கிடையில் இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

     ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. பகேரி தற்போது போர் அறையில் இருப்பதாகவும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அரசு ஊடகமான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்யக்கூடும் என்று பல நாட்களாக அமெரிக்க உளவுத்துறை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்.
    • தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் தங்களை தாக்கும் என உளவுத்துறை தகவல் கிடைத்ததாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) தெரிவித்தது. அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் ஆயுதப் படைகள் உடனடியாக இஸ்ரேலின் "ரகசிய அணுசக்தி நிலையங்களை" குறிவைக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இஸ்ரேல் ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் நலன் கருதி ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் "எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்" என்று நேதன்யாகு அறிவித்தார்.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த தாக்குதலை, "உடனடி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்குவதை நோக்கமாகக் கொண்ட முன்கூட்டிய தாக்குதல்" என்று விவரித்தார்.

    மேலும், ஈரான் திருப்பி தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு அவசரகால நிலையை காட்ஸ் அறிவித்தார்.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நேரத்தில் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இஸ்ரேலிய தாக்குதல்கள் இராணுவ உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி தொடர்பான வசதிகளை குறிவைத்திருக்கலாம் என்ற நம்பப்படுகிறது. குண்டுவெடிப்புகளுக்கான ஆதாரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஈரானின் அரசு ஊடகமான IRIB குறிப்பிட்டது.

    இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலரால் நம்பப்படுகிறது, இருப்பினும் அது இதை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை.

    இந்த சூழலில் ஈரான் திருப்பி தாக்கினால் விளைவு விபரீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

    இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.

    ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது.
    • சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்.

    அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.

    ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்தனர்.

    இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட ஆரம்ப திட்டத்தில் அவர் அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்க திட்டம் தனது நாட்டின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்று அவர் கூறினார்.

    "நாடு நூறு அணு மின் நிலையங்களை கட்டினாலும், அந்த நாடு பொருளாதார செழிப்பை அடையவில்லை என்றால், அந்த ஆலைகளால் எந்தப் பயனும் இருக்காது. மீண்டும் நிதியுதவிக்காக அமெரிக்காவை அணுக வேண்டியிருக்கும்" என்று கமேனி கூறினார்.

    இருப்பினும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை. அமெரிக்காவால் வழங்கப்பட்ட திட்டத்தில்

    ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களை வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    ஈரானின் எரிசக்தி சுதந்திரதுடன் இருப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானது. ஈரான் யுரேனியன் செறிவூட்டல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? நீங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது.

    சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது. சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்; இது பகுத்தறிவு அல்ல" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
    • இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள்.

    ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.

    தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.

    மே 1 ஆம் தேதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    பஞ்சாபைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.

    இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள். மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

    அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
    • இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.

    "ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது.
    • சிறந்த இயக்குனருக்கான விருது ஈரான் இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது.

    டெஹ்ரான்:

    பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

    திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'பாம் டி ஓர்' விருது ஈரானிய இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி 'இது ஒரு விபத்து' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

    இந்நிலையில், பிரான்ஸ் மந்திரியின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
    • காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

    இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தார்.

    இந்த சூழலில் அவரின் ஈரான் பயணம் நிகழ்ந்துள்ளது. இந்த பயணத்தில் தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.

    அவரிடம் இந்தியா மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை பிரச்சினையை ஷெபாஸ் ஷெரீப்  எடுத்துரைத்தார்.

    ஆனால் காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    அதாவது, இந்த சந்திப்பின் பின் காமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டுமே பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா தாக்கியது. இதன்பின் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார்.
    • அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது.

    காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

    இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதே கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார். தனது துருக்கி பயணத்தை முடித்து கொண்டு ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றடைந்தார். அங்கு அவரை சாதாபாத் அரண்மனையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வர வேற்றார்.

    அப்போது ஷபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளு டன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓமனில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ரோமில் ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

    ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓபன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. ரோமில் உள்ள தூதரகத்தில் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாச்சி அராக்சி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் ஆலோசனை நடத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா உடனான ஒப்பந்தத்திற்கு உதவும்படி ஈரான் ரஷியாவிடம் உதவி கேட்டிருந்தது. அதற்கு ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது.

    ×