என் மலர்

    திருப்பூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான்-அமெரிக்கா போர் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது.
    • ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

    சர்வதேச அளவிலான பேரிடர் மற்றும் போர்கள் நடக்கும் போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பது வழக்கம். தற்போது ஈரான்-அமெரிக்கா போர் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழில் துறையில், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன. சாயம், கெமிக்கல், விறகு, நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாயமிடும் கட்டணம், நடைமுறை கட்டணத்தில் இருந்து ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    பேக்கிங் மற்றும் பிராசசிங் பிரிவுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உயர்ந்துள்ளது. தையல் நூல் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நூல் இறக்குமதி பாதிக்கப்பட்டு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி கட்டணமும் உயர்த்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

    இப்படியாக ஜாப் ஓர்க் மற்றும் எலாஸ்டிக் என பல்வேறு பிரிவுகளிலும் உற்பத்தி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு பின் ரம்ஜான் பண்டிகைக்கான ஆர்டர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தன. அவற்றை உற்பத்தி செய்து அனுப்பி வைத்து ள்ளனர். அடுத்தகட்டமாக 2ம் கட்ட கோடை கால ஆர்டர் மீதான உற்பத்திக்கு முழு வீச்சில் திருப்பூர் தயாராகி வந்தது.

    ஆடை விலையை உயர்த்த திட்டம்

    இந்நிலையில் போர் சூழல் காரணமாக பெட்ரோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் ஜாப் ஒர்க் பிரிவுகளும் தற்காலிகமாக உற்பத்தி கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இது உற்பத்தியாளருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அவர்களும் உற்பத்தி கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வர்த்தக நலன் கருதி பாதிப்பை சமாளிக்கும் அளவுக்கு 5 சதவீதம் வரை உற்பத்தி கட்டணத்தை உயர்த்தலாம் என உத்தேசித்துள்ளனர். இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தனியார் கியாஸ் நிறுவனங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • சம்பந்தப்பட்ட தனியார் கியாஸ் நிறுவனத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் சென்று ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் காரணமாக இந்தியா முழுவதும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் முடங்கியுள்ளது. திருப்பூரில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவுப்பண்டங்கள் தயாரிப்பை குறைத்துவிட்டனர். சில ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

    வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தனியார் கியாஸ் நிறுவனங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இவ்வாறு கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான குழுவினர் தனியார் கியாஸ் நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீரபாண்டி வாய்க்கால்மேடு பாரியூர் அம்மன் நகரில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கியாஸ் நிறுவனத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் சென்று ஆய்வு செய்தார். ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

    சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடம் செல்போனில், அதிகாரி தொடர்பு கொண்டதற்கு அவர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருக்க வாய்ப்பு உள்ளதால் அந்த கட்டிடத்தை, மாவட்ட வழங்கல் அதிகாரி பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
    • ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரமான திருப்பூரில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள ஏராளமான பிரியாணி கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் போதிய சிலிண்டர் விநியோகம் இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    சாதாரணமாக ரூ.1700 முதல் 2,000 வரையில் விற்பனை செய்யப்படும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.3,500 முதல் 4,000 வரை விற்பனை செய்கின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதனால் கடந்த 2 நாட்களாக மங்களம் சாலை , டவுன் ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சில பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது விற்பனை செய்யும் விலைக்கு ஏற்ப சிலிண்டர் வாங்கி சமைத்து விற்பனை செய்யும்பட்சத்தில் நஷ்டமே ஏற்படும் என கடைகளை பூட்டியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தனியாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், சிறுமிகளை கடிப்பதோடு வயதானவர்களையும் விரட்டி விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வி.ஜி.வி., குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை எல்லை மீறி போயுள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை வி.ஜி.வி., குடியிருப்பு 10-வது வீதியில் வீட்டின் முன் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென விரட்டி சென்று பாய்ந்து கடித்தது. இதில் அந்த சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதே நாய் நேற்று ஒரே நாளில் அந்தப் பகுதியில் மேலும் பலரையும் கடித்து குதறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தெருநாய்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களும் போதிய பாதுகாப்பு இன்றி அவற்றை பொது இடங்களுக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே சிறுமியை தெருநாய் விரட்டி சென்று கடிக்கும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயன். திருப்பூர் வளையங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனமானது பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், காட்டன் பாக்ஸ்கள், பாலி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கற்திட்டை அமைந்திருக்கும் இடத்தை பாண்டியன் திட்டு என்றழைக்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கல்லாபுரம் உத்தில் வாய்க்கால் பரமானந்தம் வயலுக்கு அருகில் அமராவதி ஆற்றின் கரையின் தெற்குப்பகுதியில் வயல் வெளிகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான கற்திட்டை ஒன்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தினர்.

    இது குறித்து தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது :

    கரைவளி நாடான கல்லாபுரத்தில் பெரிய அளவிலான கற்திட்டை சிதில மடைந்திருந்தது. இதற்கு முன்பாக இந்தக்கரைவளியில் வேறெங்கிலும் இது போன்ற கற்திட்டை கிடைக்கப்பெறவில்லை.

    இது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக பெருங்கற்காலத் திட்டை அமைப்பாக இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக பாறைகள் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கற்திட்டை அமைந்திருக்கும் இடத்தை பாண்டியன் திட்டு என்றழைக்கின்றனர்.

    கரைவளியில் ஆங்காங்கெ பாண்டியன் பெயரில் கரடு இருப்பதும், மலைப்பகுதியில் மடம் என்ற பெயரில் இருப்பதும் களத்தரவுகளில் தெரிய வருகிறது. அமராவதி மலைப்பகுதியில் பாண்டியராஜா மடம், கொற்றவன் கரடு, பாண்டியன் திட்டு என்ற பெயர்களும் உள்ளது.

    இந்தக் கற்திட்டைகள் மூன்று கல் குத்துக்கற்கள், மூடுகல் 12×8 ஒரே பாறைக்கல் உயரம் 4 அடி 10×4, மற்றும் 6×3, 6×4 வகையில் பாறைக்கற்கள் என ஒன்றின் மேல் ஒன்றாக மொத்த 8 பாறைக்கற்கள் விழுந்துகிடக்கிறது.

    இது குறித்த அந்தப்பகுதியில் மக்களிடம் கேட்டபோது இது வரலாற்றுச்சின்னம் என்பது தெரியாமல் ஜே.சி.பி இயந்திரத்தால் இதனை சிதிலமடையச் செய்தது கள ஆய்வில் தெரியவந்தது.

    அமராவதி கரைவளியில் கல்லாபுரம் சிற்றூரான ஆயிரம் காலத்திற்கும் முற்பட்டதென கல்வெட்டுகள் வழி உறுதி செய்திருந்தாலும், அதற்கு முன்பாக அமராவதி நதிக்கரையில் மக்கள் வசித்தமைக்காக நாகரிகங்கள் இருந்துள்ளதை ஏற்கனவே உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொல்லியல் சின்னங்கள் வழி ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

    பெருங்கற்காலக் கற்திட்டை கிடைத்திருப்பதன் மூலம் அமராவதி கரை வளிப்பகுதி மூவாயிரம் காலத்திற்கும் முற்பட்டவை எனவும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஆன்பொருநை குறித்தான பாடல்களும் நமக்கு சான்றாகத் திகழ்கிறது.

    இந்தக் கள ஆய்வில் பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெய்சிங்,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வி.கே. சிவகுமார், அருள்செல்வன், மற்றும் வீரய்யன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செவிலியர்கள் அளித்த புகாரின் பேரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தது.
    • அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து மருந்து மாத்திரைகள் பெற்று செல்கிறார்கள்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், மருந்து வழங்கும் அறையில் கட்டிடங்கள் வலுவிழந்து காணப்பட்டது.

    இதுகுறித்து செவிலியர்கள் அளித்த புகாரின் பேரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்காக அந்த அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த கட்டிடத்தின் மேற்கூரை இரவு இடிந்து கீழே விழுந்தது. நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்த காரணத்தால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஆட்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பயணிகள் இருப்பதை விட மதுபிரியர்கள் தான் அதிக அளவில் உறங்கி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேருந்து நிலையத்தில் மதுபிரியர்களின் தொல்லையால் பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவினாசி பேருந்து நிலைய நடைபாதை மற்றும் இருக்கைகளில் ஒரு சில மதுபிரியர்கள், அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அரைகுறை ஆடையுடன் உளறிக்கொண்டு தூங்குகிறார்கள்.

    இவர்களின் செயல்பாட்டால் பஸ்சிற்கு காத்திருக்கும் பெண்களை முகம் சுழிக்க செய்கிறது. இதேபோல் அவினாசி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் பயணிகளின் இருக்கை உள்ளது. இங்கு பயணிகள் இருப்பதை விட மதுபிரியர்கள் தான் அதிக அளவில் படுத்து உறங்கி வருகிறார்கள்.

    இதனால் பஸ்சிற்கு காத்திக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுப்பிரியர்களை அங்கிருந்த அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
    • போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.

    ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி குண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில் ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்), கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் கடல் வழி போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து கடும் சிக்கலை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் துபாய் சென்று அங்கிருந்து மீண்டும் செல்லும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.

    வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால் அவ்வகை ஏற்றுமதி அரிதாகவே செய்யப்படுகிறது . இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதையில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றிச்செல்லும் நீண்ட பாதையை கப்பல்கள் தேர்ந்தெடுக்கின்றன. இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.

    மார்ச் 2, 2026 நிலவரப்படி மெர்ஸ்க் , எம்.எஸ்.சி., ஹபாக் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்கள் இந்த வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால் ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும் . அதே போல் வான் வழி போக்குவரத்தில் ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் போன்றவை வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

    ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்திருப்பதால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் கூறுகையில், "போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதால் சரக்கு ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்து உள்ளது . வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும் போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும். எனவே போர் இல்லாத உலகம் மட்டுமே வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் துபாய் இந்திய நாட்டு ஏற்றுமதியின் மையமாக செயல்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் அங்கே வைத்து பிரித்து பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள போர்பதட்டம் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கி இருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எவ்வளவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது என தெரியவரும். போரின் பாதிப்பு குறித்த தாக்கம் அடுத்த ஓரிரு வாரங்களில் முழுமையாக தெரியும் என்றார்.

    இந்த சூழலில் இழப்புகளை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்திய அரசு இது தொடர்பாக அவசர கூட்டங்களை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்யும் போது எப்.ஓ.பி., (சரக்கு ஏற்றிய பின் பொறுப்பு வாங்குபவருடையது) என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. போர் காரணமாக பின்னலாடை துறை மட்டுமல்லாது விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர்.
    • வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    மேலசொக்கநாதபுரம்:

    திருப்பூரை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது27). இவர் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள மறையூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.

    இவர்கள் நட்பு அதிகரித்த நிலையில் தனது குடும்ப சூழ்நிலையை சிறுமி தெரிவித்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அப்போது திருப்பூருக்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் சிறுமியை வரவழைத்து கூட்டம் அதிகம் இல்லாத தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் தன்னுடனே அவர் தங்க வைத்துள்ளார். இதனிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி முகமது ரியாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் முகமது ரியாசை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணை முடிந்த நிலையில் முகமது ரியாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.
    • எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்தில் (எண்.9 ஜே) கண்டக்டராக கடந்த 2 வாரங்களாக கோகிலா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    திருப்பூரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் ஆர்வமுடன் பணியாற்றி வருவது பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பெண் கண்டக்டர் கோகிலா கூறுகையில், நான் எம்.ஏ.,படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம். நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பால் தற்போது எனக்கு வாரிசு வேலை கிடைத்துள்ளது.

    இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை பேருந்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன். எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

    அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×