என் மலர்

    திருப்பூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
    • சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நல்லூர்:

    திருப்பூரில் இருந்து லாரி, ரெயில் மூலம் பனியன் சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் வர்த்தகத்திற்காக வெளியிடங்களுக்கு செல்கின்றன. பெரிய விற்பனை கடைகள், மையங்கள், ஏஜெண்டுகள், சந்தைகள், சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் என பல்வேறு தரப்பிலும் சரக்குகள் மொத்த, சில்லறை விற்பனைக்காக விநியோகம் செய்யப்படுகின்றன.

    கடந்த 7-ந்தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் போர்ச்சூழல் நடவடிக்கை காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் உள்நாட்டு பனியன் சரக்குகள் 40சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பனியன் வர்த்தக ஏஜெண்டுகள் தெரிவித்தனர்.

    பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாலும், சோதனை நடவடிக்கைகள் காரணமாக வாகனங்கள் செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதாலும் பனியன் சரக்குகளை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பனியன் சரக்குகளை அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் கூறியதாவது:-

    'இந்தியா-பாகிஸ்தான் போர் அறிவிப்பு குறித்த தகவல் வெளியானபோதே வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் பல மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப முடியவில்லை. தற்போது போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இருந்தாலும் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஐதராபாத், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லும் பனியன் சரக்குகள் திருப்பூரில் முடங்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையால் சுமார் 30முதல் 40சதவீத பனியன் சரக்குகளை வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
    • ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே காவிலிபாளையம் அருகே தண்டவாளத்தில் மர்மநபர்கள் சிலர் கற்களை வைத்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஏறி சென்ற போது அந்த கற்கள் நொறுங்கியுள்ளது.

    இது குறித்து என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரூவந்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.

    மர்மநபர்கள் தண்டவாளத்தில் வரிசையாக ஜல்லிக்கற்கள் வைத்திருந்த நிலையில் அதில் ரெயில் ஏறி சென்றது தெரியவந்தது. சிறிய கற்கள் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்த மர்மநபர்கள் போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
    • உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், விற்பனை ஆகாத காய்கறிகளை குப்பையில் கொட்டுவதாகவும் உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பின்னர் மீண்டும் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதுமாக இருந்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் உழவர்சந்தை விவசாயிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை விற்காமல் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சந்தையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


    இது குறித்து ரங்கபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள், ஊட்டி காய்கறிகள் என அனைத்தையும் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீதியை மொத்த மார்க்கெட்டுக்கு கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    மார்க்கெட்டில் கடை அமைத்தவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தற்போது உழவர்சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நாங்கள் போராட்டம் நடத்திய போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    உழவர்சந்தை அருகிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் பொது மக்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் 30 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்து பின்னர் குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தள்ளி தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும் என்றனர். சாலையோர கடை வியாபாரிகள் கூறுகையில்,

    தாராபுரம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டி வருவதால் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றனர். உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு வடக்கு முத்துச்சாமி அவுட் பகுதியில் 4 வீதி பொது மக்களுக்கும் பொதுவாக குடிநீர் குழாய் இருந்து வந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வந்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் பொதுக் குடிநீர் குழாய் இருந்து வந்த நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் அகற்றப்படுவதாக கூறி அகற்றப்பட்டுள்ளது.

    குடிநீர் குழாய் அகற்றப்படுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அகற்றப்படக்கூடாது, கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிநீர் குழாய் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


    இன்று காலை அப்பகுதியில் குடிநீர் குழாய் இல்லாததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு முத்துசாமி லே அவுட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பொது மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களை வரவழைத்து எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிநீர் குழாய் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
    • பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தனபால்-சாவித்திரி தம்பதியரின் மகன் சங்கீர்த்தன். தனபால் விசைத்தறி தொழில் செய்து வரும் நிலையில் சங்கீர்த்தன் தனது பள்ளி படிப்பை அரசு பள்ளியில் முடித்துள்ளார்.

    மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். இதில் அவருக்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து நீட் நுழைவு தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

    நேற்று திருமுருகன் பூண்டியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என சரிபார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

    அந்த கடிதத்தில், நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மருத்துவ படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன் என தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

    இன்று காலை எழுந்து பார்த்த போது சங்கீர்த்தன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சங்கீர்த்தன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வன விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.

    காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
    • ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சேர்வக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44), விவசாயி. இவரது மனைவி ஆனந்தி (42). இவர்களது மகள் ப்ரீத்தா(13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் 3 பேரும் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு தாராபுரம் திரும்பினர். அங்கு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு 3 பேரும் சேர்வக்காரன் பாளையத்திற்கு புறப்பட்டனர்.

    தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக சாலையோரம் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாததால் நாகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    இரவு நேரம் என்பதால் அவர்கள் பள்ளத்திற்குள் விழுந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை. பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியதில் நாகராஜ், ஆனந்தி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவரது சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 பேரும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். உடனே இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், ப்ரீத்தாவை மீட்டு சிகிச்சைக்காக தாரா புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ், ஆனந்தி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாலப்பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதற்குள் விழுந்து 2 பேரும் பலியாகி உள்ளனர். பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது போல் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தேவையான பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விபத்துக்குக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ஈரோடு கொலை சம்பவம் போன்று பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தில் தந்தை,தாய், மகன் ஆகியோரை தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறி வைத்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 44 போலீசார் அடங்கிய 22 குழுக்கள் தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பி.ஏ.பி. கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். தனியாக பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    • இன்று 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தின் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 2023ம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடைகளை பிடித்தும் தங்களது சேலையால் தலையை மூடியும் கடும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×