என் மலர்

    திருவண்ணாமலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
    • திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.

    மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.

    கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
    • நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சக்திகளை எதிர்த்து திமுக வெற்றி பெற்றது. எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் செய்யவில்லை.

    சோதனைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் திமுக ஒளிவிட்டுக் கொண்டிருக்க அதன் அடித்தளம் தான் காரணம்.

    மக்களை சந்தித்து திமுகவை வளர்த்தோம். உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்புல்லாக செயல்படுகிறார், இறங்கி அடிக்கிறார்.

    கொள்கை ரீதியாக திமுகவை வலுவாக இயக்க உதயநிதி ஸ்டாலின் பாசறை கூட்டங்களை நடத்தினார்.

    உதயநிதி Most Dangerous என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார்.

    திமுகவிற்கு புதுப்பேச்சாளர்களை உருவாக்கி, அறிவுத்திருவிழாவை உதயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்.

    நம் தோளில் தமிழ்நாட்டை காக்கும் கடமை மட்டுமல்ல இந்தியாவையே காக்க வேண்டிய கடமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
    • நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    பின்னர் அவர் மேடையில் உரையாற்றியதாவது:-

    மாஸா, கெத்தா இணைஞரணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக் அனைவருக்கும் நன்றி.

    நிகழ்ச்சிக்கு வந்துள்ள இஞைர்களை பார்த்ததும் 50 ஆண்டுகள் பின்னால் சென்றதபோல் உணர்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள திமுக இளைஞர்களின் எனர்ஜி எனக்கு டிரான்பராகிவிட்டது.

    50 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்தபோது திமுக இளைஞரணியை வளர்க்க தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன்.

    கிராமம் கிராமமாக திண்ணை பிரசாரம் பொதுக்கூட்டம் என மக்களை வரவழைத்து திமுகவை வளர்த்தெடுத்தேன்.

    திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது அவருக்கு வயது 40. உழைத்து, வளர்க்கப்பட்ட இயக்கத்திற்கு புது ரத்தம்போல இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

    நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
    • 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.

    இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நாளை நடைபெறுகிறது.

    இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.

    இதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கள் பகுதியில் பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் திடல் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கலைஞர் திடலில் நாளை மாலை 4 மணிக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு தொடங்குகிறது.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதில் 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலையில் நாளை நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    அதுமட்டுமின்றி என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்று அறிவித்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    அவ்வாறு வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் கட்டாயம் மகளிர் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் இப்போது வீடு வீடாக சென்று தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் வருகிற 14-ந்தேதி நடத்துகிறார்.

    தேர்தலுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் இந்த மண்டல மாநாட்டில் வட மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். அப்போது சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்துவார் என தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், த.வெ.க. கட்சியுடன் காங்கிரஸ் ரகசியமாக பேசி வருவது பற்றியும் இந்த மாநாட்டில் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அது தி.மு.க.வின் வெற்றியை முடிவு செய்தது. அதேபோல் திருவண்ணாமலையில் இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

    இது 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதற்காக இளைஞரணி மண்டல மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது

    மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
    • மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

    திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

    இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

    முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். 

    கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    முன்னதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
    • மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.

    அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

    மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.

    கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

    தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'டிட்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

    கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவும், உயிர் சேதமும் ஏற்பட்டது. இதனால் மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது 'டிட்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுனர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே நிலைச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலை ஏறுவது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலையேற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அவர்கள் கூறியதாவது:-

    தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

    பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை பொருத்து 40 பஸ்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக 24 தற்காலிக பஸ் நிலையங்களும், 130 கார் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக போலீஸ் உதவி மையங்கள், குடிநீர், மின்விளக்கு வசதிகள் மற்றும் தகவல் பலகைகள் ஏற்பாடு செய்யப்படும்.

    கார்த்திகை தீபத்தன்று மழை பெய்தால் தேங்கி நீங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு தனியார் கல்லூரிகளின் 220 பஸ்கள் இலவசமாக இயக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரூ.10 சலுகை விலையில் 90 மினி பஸ்கள் இயக்கப்படும். கார் நிறுத்தும் இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும்.

    திருவண்ணாமலைக்கு ஏற்கனவே 16 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீபத்தன்று மேலும் 16 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 25 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் ரூ.60 வசூலிக்கப்படலாம். அதிகப்படியான கட்டண வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் 90 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். கோவிலுக்குள் 7 மருத்துவ குழுக்கள் 45 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 5 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2 விருந்தினர் இல்லங்கள் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். மேலும் தேவையான உபகரணங்களுடன் கூடிய மருத்துவர் குழுவும் இருக்கும். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×