என் மலர்

    விருதுநகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம் முதலில் நண்பர்களாக தொடங்கி, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. நாக அட்சயாவை மனதார காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.

    வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து முதலில் தயங்கிய அவர் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

    இதற்கிடையே நாகஅட்சயாவிடம், அவரது வலைதள காதலன் லிவின், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை என்பதால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

    அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    இதனிடையே, லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், லிவின் வருகைக்காக காத்திருந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அது போன்ற நடவடிக்கைகளில் ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த போதிலும், தொடர்ந்து பலர் பணத்தையும், பொருளையும் இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி உள்ளது. அதிக தேவை இருப்பதால் அந்த ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

    இதனை சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெம்பக்கோட்டை பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இரண்டு இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர். இந்த சோதனையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர், பால முருகன் மற்றும் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
    • ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

    மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

    நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.

    இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

    மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

    அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது.
    • கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமாகிய கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தனிமை சிறையில் தவித்தேன். ஆனாலும் நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது. என்னைத்தான் அழிக்க நினைத்தார்கள்.

    கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரிடமாவது நான் வேலைக்காக பணம் வாங்கியதாக வரலாறு உண்டா? எடப்பாடியாரின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பேன். சிவகாசி என்னுடைய மண். யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார்.
    • தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    சிவகாசி:

    காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாகவும், அத்தாட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    ராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகின்ற வகையில், என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவது அவரை வரவேற்பது தமிழருடைய கடமை உரிமை.

    சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரவேற்றது போற்றக்கூடியதாகும். அவர் ஒரு அற்புதமான பாராளுமன்ற உறுப்பினர்.

    அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற பெருமையையும், புகழையும் பிரதமர் மோடியும் வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை.
    • அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிப்பு.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
    • சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.

    இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது.
    • அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    சாத்தூர்:

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதம் முழுவதும் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

     

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழுவாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி கையில் வேப்பிலையுடன் ஆடிக் கொண்டு கோவிலிலை வலம் வந்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி அம்மனை வணங்கினர்.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், கழிவறை குளியலறை வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சார்பில் பரம்பரை அறங்காவலர் குமு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
    • ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள் என்று பாஜக தொண்டர் கூற சிரிப்பலை எழுந்தது.

    விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று கூற அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

    வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?
    • நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசத்தான் செய்யும். அ.தி.மு.க.வின் பிரச்சனையை பா.ஜ.க.வும் பேசும்.

    * பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. அச்சத்தில் உள்ளது.

    * நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    * காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×