என் மலர்

    இந்தியா

    8-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர் - தெலுங்கானாவில் ஷாக்
    X

    8-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர் - தெலுங்கானாவில் ஷாக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
    • குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.

    இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

    Next Story
    ×