என் மலர்

    தெலுங்கானா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
    • ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
    • பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள்.

    பரபரப்பான தற்போதைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கிவிட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வந்திருக்கிறது தாத்தாக்கள் சங்கம்.

    தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில்தான் இந்த தாத்தாக்கள் சங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகள் யாராவது வயதான பெற்றோரை கவனிக்காமலோ துன்புறுத்துவதாகவோ தகவல் தெரிந்தால் இவர்கள் தண்டிக்கும் விதம் புதுமையாக இருக்கும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்த பல பெற்றோரின் சொத்துகளை பறித்துக்கொண்டு பல பிள்ளைகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனை தடுப்பதற்காகவே தாத்தாக்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.

    கடந்த 2010-ம் அப்போதைய அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ரெட்டி ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து இந்த சங்கத்தை ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி இந்த சங்கத்தை பதிவு செய்தும் வைத்திருக்கிறார். இதில் ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    இந்த ஊரில் பெற்றோரை அவரது மகன் அல்லது மகள் சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் தாத்தாக்கள் சங்கம் வெளியே சென்று புகார் செய்ய வாய்ப்பு அளிக்காது. அதே சமயம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்காது. உடனடியாக அந்த மகன் அல்லது மகளை தாத்தாக்கள் சங்க உறுப்பினர்கள் அழைத்து எடுத்து சொல்கிறார்கள். அப்போதும் கேட்காவிட்டால் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

    அதற்கு மேலும் முரண்டுபிடித்தால் 40 உறுப்பினர்களும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டின் முன்பு வைத்து சமைத்து, பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்.

    பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள். வீட்டு முன்னேயே சென்று 40 பேரும் சமைத்து அவர்களும் சாப்பிட்டு பராமரிக்காத பெற்றோருக்கும் சாப்பாடு வழங்குகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் மனம் மாறும்வரை அவர்கள் வீட்டின்முன் சமைத்து பெற்றோருக்கு கொடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறார்கள்.

    இத்துடன் பிள்ளைகள் தாத்தாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி தங்கள் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக உறுதி பத்திரம் எழுதி தருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
    • மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.

    செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.

    பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.

    பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.

    இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.

    குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
    • புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மாதப்பூர், காணாமேட்டில் உள்ள மேக்னஸ் லேக் வியூ குடியிருப்பை சேர்ந்தவர் அம்பேத்கர்.

    இவர் மின்சார வாரியத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதப்படுத்தி வந்தார்.

    இதனால் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்காண ரூபாயை லஞ்சமாக கொடுத்து மின் இணைப்பு பெற்றனர்.

    அம்பேத்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

    சங்கரெட்டி மாவட்டம் பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் பினாமி சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அம்பேத்கரின் வங்கி கணக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.150 கோடி என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அம்பேத்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும்.
    • சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.

    இது மட்டுமின்றி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை வைத்து இந்த கும்பல் வசதி படைத்த திருமணமான ஆண்களுக்கு வலை வீசுகின்றனர்.

    சபல புத்தியால் ஏமாறும் ஆண்களை இளம்பெண்கள் ஓட்டல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு நெருக்கமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் படம் எடுக்கின்றனர்.

    பின்னர் அந்த படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்கள் அப்பாவி போல நடித்து அழுது புலம்பி பணம் பறிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் இந்த ஆண்களுடன் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

    செகந்திராபாத்தை சேர்ந்த யோகா குரு என்பவரை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் யோகா குருவை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது ரகசிய கேமரா மூலம் அதனை படம்பிடித்தனர்.

    ஓட்டலில் தனிமையில் இருந்த போது யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை கொன்று விடுவார் எனக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். இதனை நம்பி யோகா குரு ரூ.26 லட்சம் கொடுத்தார். அதனை பறித்துக் கொண்டு இளம்பெண் தலைமறைவாகிவிட்டார்.

    இதே போல அரசு ஊழியர் ஒருவர் ஹனி டிராப் டேட்டிங் ஆப்பில் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அந்த இளம்பெண் அவருடன் நீண்ட நாட்கள் தகவல்களை பரிமாறினார். பின்னர் இருவரும் ஒரு ஓட்டல் அறைக்கு சென்றனர்.

    அங்கு வைத்து அரசு ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு இளம்பெண் தப்பி சென்று விட்டார்.

    இதேபோல பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்பது போலவும் இளம்பெண்கள் ஆண்களை மயக்கி அவர்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

    இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 160 பேரை ஹனிடிராப் ஆப் மூலம் ஓட்டல் அறைகளுக்கு அழைத்து சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஹனிடிராப், மேட்ரிமோனி டேட்டிங், ஓரினச்சேர்க்கை ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் சபல புத்தி கொண்டவர்கள் இணைகிறார்கள். அவர்களை கவர்ந்து இழுத்து நிர்வாணமாக வீடியோ எடுக்கிறார்கள்.

    இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் எடுத்து பணம் பறிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
    • வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது. 

    கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.

    வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
    • அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.

    பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.

    வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.

    இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
    • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துளளது

    முன்னதாக நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து மகாராஷ்டிரா காவல்துறை ஐதராபாத்தில் புறநகர்ப் பகுதியான செராமல்லியில் தனியார் ரசாயன தொழிற்சாலையை சோதனையிட்டது.

    இந்த ஆய்வுகளின் போது, மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலையில் இருந்த ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களுடன் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
    • பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் 36 வயது தந்தை தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு டதற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வேல்டண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக கடந்த புதன்கிழமை  உள்ளூர்வாசிகள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து, காவல்துறை மேற்கொண்ட விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், அவரது 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

    ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியுடன் சண்டையிட்டு, ஆகஸ்ட் 30 அன்று தனது மூன்று குழந்தைகளுடன் நாகர்கர்னூலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
    • எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.

    திருப்பதி:

    மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். நிறைய ரத்த தானம் செய்ய வேண்டும். வரிசையில் காத்திருக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு நிறைய நேரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்குகின்றன.

    டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தி சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய ஒரு சுகாதார எந்திரத்தை உருவாக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் கிங்கோத்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் மலக்பேட்டை பகுதி மருத்துவமனை ஆகியவற்றில் ஒரு முன்னோடி திட்டமாக இந்த எந்திரம் மாநில அரசு அமைத்துள்ளது

    எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, லிப்பிட் ஹீமோகுளோபின், நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.

    சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க வேண்டும். காது, தொண்டை மற்றும் மூக்கு பாகங்களை பரிசோதிக்கலாம். கண் பரிசோதனைகள் செய்யலாம்.

    இது வெற்றி பெற்றால், மேலும் பல அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.

    பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.

    இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.

    மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.

    ×