என் மலர்

    தெலுங்கானா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.
    • சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்தவர் ஓடேலு. இவரது மனைவி லலிதா. தம்பதியினர் சிங்கரேணி அரசு ஆஸ்பத்திரி அருகே குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய மாட்டுக்கொட்டகையை இடிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதிகாரிகளின் நோட்டீசுக்கு ஓடேலு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    நேற்று ஓடேலுவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மாட்டு கொட்டகையை இடித்து தள்ளினர். இதனைக் கண்ட தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    நேற்று மாலை ஓடேலு தனது மனைவி மற்றும் உறவினர் ரமேஷ் என்பவருடன் அவருடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்தார்.

    எருமை மாடுகளை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக தனது மாட்டு கொட்டையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய ஓடேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரஜினி நடித்த அண்ணாமலை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
    • குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.

    இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பேருந்து நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
    • இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் பைக்கில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • வரதட்சணையாக வழங்கப்பட்ட பணம், நகையை கொடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்

    தெலங்கானா மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனால் கோபமடைந்த லாவண்யா உறவினர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே

    பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 50). இவரது முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சமக்கா (35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். சமக்கா சூர்யா பேட்டையில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீனுவின் சகோதரி மகள் ராஜேஸ்வரியின் 14 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீனு மற்றும் அவரது 2-வது மனைவி சமக்காவுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

    பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு தன்னிடமிருந்த கத்தியை எடுத்து சமக்கா கழுத்தில் 3 இடங்களில் சரமாரியாக குத்தினார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. பிறந்தநாள் விழாவில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டனர்.

    பின்னர் ஸ்ரீனு அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த சமக்கா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சமக்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என விமர்சனம்.
    • விசாரணை நடைபெற்று வருகிறது என ரேவந்த் ரெட்டி சினிமாவை சுட்டிக்காட்டி விளக்கம்.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரகேர ராவ் முதல்வராக இருந்தபோது, காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் சின்ன மீன்கள் (கீழ்மட்ட அதிகாரிகள்) மட்டுமே பிடிபட்டுள்ளன என விமர்சனம் எழுந்துள்ளது.

    இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் அளிக்கையில் "சினிமாவில் வில்லன் முதலில் சாகமாட்டான். நீங்கள் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?. டெல்லியில் மதுபான கொள்கை மோசடியில் நீண்ட நாட்கள் கழித்துதான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுதான் வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள் வீட்டில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நீதிபதி கோஷ் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. உயர்மட்ட விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    காலேஷ்வரம் பாசன திட்டம் தொடர்பாக சந்திரசேகர ராவ் கோஷ் கமிஷன் முன் கடந்த 11ஆம் தேதி ஆஜரானார். முன்னாள் பாசன அமைச்சர் டி. ஹாரிஸ் ராவ் பலமுறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47) கொல்லப்பட்டார்.

    தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பட்டியலின பிரிவு செயலாளர் எம். அனில், காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திங்கள்கிழமை இரவு, அவரை இரு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், பண தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதற்கு ஒரு நாள் முன்னதாக, மாலக்க்பேட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47), அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பகையால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    ஐதராபாத்,

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை.
    • வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம்.

    தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

    நீதிபதி கவாய் தனது உரையில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் நுழையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

    சட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு பட்டங்களுக்காக கடனில் மூழ்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

    இந்தியா தரமான சட்டக் கல்வியை வழங்குகிறது, வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை என்றும், ஒருவரின் திறமை அவர்களின் பணி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    எனவே வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் மாணவர்களை அறிவுறுத்தினார்.

    மேலும் தற்காலத்தில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களையும் கவாய் எடுத்துரைத்தார். இந்தியா பல்வேறு சட்ட சவால்களை எதிர்கொள்கிறது என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் உள்ளவர்கள் அனைவரும் கவனமாக இருப்பது முக்கியம் என்றும் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும்
    • ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    இந்த புதிய உத்தரவின்படி, கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 8 மணியிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

    இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பை தாண்டக் கூடாது என்ற விதிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

    தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்த பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்த மாற்றங்கள், தெலங்கானா மாநிலத்தில் வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, தொழிலாளர் நலனையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதில் கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நேற்று தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்கள் சிலர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். அப்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தனர். இதற்கு மல்லிகார்ஜுன கார்கே எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
    • முதல் கட்டமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.

    முதல் கட்டமாக, அரசுத்தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின்போது 143 பேர் பணியில் இருந்தனர். அதில் 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. வேலை செய்தவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×