என் மலர்

    கால்பந்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புளோரியன் விர்ட்ஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
    • பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

    தற்போது புளோரியன் விர்ட்ஸ் பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு டிரான்ஸ்பர் கட்டணமாக இந்த தொகையை செலுத்த இருக்கிறது லிவர்பூல். இதன் மூலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான விலைக்கு டிரான்ஸ்பர் ஆன வீரர்கள் பட்டியலில் புளோரியன் விர்ட்ஸ் இணைய இருக்கிறார்.

    செல்சி அணி என்சோ பெர்னாண்டஸை கடந்த 2023-ல் 106.7 பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் 115 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு மொய்சஸ் கெய்சிடோவை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.

    மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

    மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
    • இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

    தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.

    மற்ற ஆட்டங்களில் பொலிவியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் ,உருகுவே 2-0 என்ற கணக் கில் வெனிசுலாவையும் தோற்கடித்தன. அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் அந்த அணி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 69வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

    வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

    ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 45-வது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது.

    61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138-வது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.

    இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது முறையாக இந்த பட்டத்தை வென்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
    • இப்போட்டியில் பி.எஸ்.ஜி அணி 5 கோல்கள் அடித்து அசத்தியது.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பி.எஸ்.ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கொல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 - 0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இதய UEFA சாம்பியன்ஸ் லீக் நடைபெறுகிறது.
    • இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.

    அதன்படி முதல் அரையிறுதியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் போடோ/கிளிம்ட் அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
    • இறுதிப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 36 போட்டிகள் முடிவில் 85 புள்ளிகள் பெற்று முதலிடம்.
    • ரியல் மாட்ரிட் 78 புள்ளிகள் வெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.

    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.

    2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா இன்று அதிகாலை எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. லேமின் யாமல் 53ஆவது நிமிடத்திலும், ஃபெமின் லோபஸ் (90+6) கடைசி நேரத்திலும் கோல் அடித்தனர்.

    இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து லா லிகா கோப்பையை வென்றது. பார்சிலோனாவின் 28ஆவது லா லிகா கோப்பை இதுவாகும்.

    ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.

    பார்சிலோனா கடைசி 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை.
    • கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.

    பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.

    சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார்.

    இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத்  தாண்டியது.

    களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.

    உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ பணம் சம்பாதித்து வருகிறார்.

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    லெப்ரான் ஜேம்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் தேசிய அணியில் விளையாடினார்.
    • தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ் 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தார்.

    உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார்.

    செவ்வாயன்று நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் 15 வயதுக்குட்பட்ட பிரிவு தேசிய அணியில் இடம்பெற்ற  சாண்டோஸ் அறிமுகமானார். இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    போர்ச்சுகல் அணிக்காக தனது மகன் அறிமுகமானதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " போர்ச்சுகல் அணிக்காக நீ அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!" என்று ரொனால்டோ பதிவிட்டார்.

    இந்த கால்பந்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் சாண்டோஸ் உடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அவரது தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.
    • நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.

    2024-25 லா லிகா லீக்ககில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டை 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது.

    ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். ஆனால் அது அந்த அணி வெற்றி பெற போதுமானதாக இல்லை.

    பார்சிலோனா அணிக்காக, ரஃபின்ஹா இரண்டு கோல்களையும், லாமின் ய்மல் மற்றும் எரிக் கார்சியா தலா ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    இந்த வெற்றியின் மூலம், லீக்கில் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பார்சிலோனா அணி, புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
    • அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.

    அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.

    அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.

    பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.

    மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.

    ×