என் மலர்

    கால்பந்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
    • நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

    நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
    • மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
    • பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.

    CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

    மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.

    பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.

    ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
    • ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.

    ஐரோப்பாவில் நடைபெறும் கிளப்புகள் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியது.

    இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது.

    அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 20 கிளப்புகள் விளையாடி வருகின்றன. இதில் லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.

    அதற்கு அடுத்தப்படியாக ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், நியூகேஸ்டல் உள்ளிட்ட கிளப்புகளும் வீரர்கள் மாற்றத்துக்கு பணத்தை அதிகமாக செல வழித்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
    • கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
    • மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • பயிற்சியாளர் கேட்டுக் கொண்டதால் இந்த வருடம் நான்கு போட்டிகளில் விளையாடினார்.

    இந்தியாவில் தற்போது வரை சுனில் சேத்ரியை தவிர, தரமான வீரர் கிடையாது என இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் தெரிவித்துள்ளார்.

    CAFA நேஷன்ஸ் கோப்பை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேசிய முகாமில் சேத்ரி இடம் பெறவில்லை. இது அக்டோபர் மாதம் முக்கியமான ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளுக்கான தயார் படுத்துதல் தொடர். அக்டோபர் 9ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் சுனில் சேத்ரி விளையாடுவார் எனத் தெரிவித்தார்.

    சுனில் சேத்ரி குறித்து தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் கூறுகையில் "இந்தியாவில் சுனில் சேத்ரியைத் தவிர்த்து தரனமான (Quaity) வீரர் கிடையாது. அவர் விளயைாடுவதற்கு தயாராக இருக்கும்போது, அவரை ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அவருடைய அனுபவம் நமக்கு தேவை. அவர் ஒரு லெஜெண்ட். நாட்டிற்காக பலவருடங்கள் விளையாடி பங்களிப்பை கொடுத்துள்ளார்" என்றார்.

    சுனில் சேத்ரி கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு கடந்த மார்ச் மாதம் மாலத்தீவு அணிக்கெதிராக களம் இறங்கினார். அப்போதைய தலைமை பயிற்சியாளர். மனோலோ மார்க்யூஸ் வேண்டுகோளை தொடர்ந்து அணிக்கு திரும்பினார்.

    அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 0-0 என டிரா செய்தது. ஹாங்காங்கிற்கு 0-1 என தோல்வியடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
    • போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்

    ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை தோற்கடித்து அல் நசார் க்ளப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .
    • அரையிறுதி போட்டியில் ரொனால்டோ ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.

    சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சவுதி சூப்பர் கப் இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி மோதியது.

    இறுதிப்போட்டி 2-2 என சமன் ஆனதால் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், 3-5 என்ற கோல் கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்றது.

    இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    அல் நசார் க்ளப்-காக ரொனால்டோ Major கோப்பைகளை இதுவரை வென்றதில்லை என அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
    • இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது.

    ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.

    இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.

    அதன்படி, வரும் நவம்பரில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
    • இந்த விருதை 3ஆவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரரான முகமது சாலா விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான PFA விருதை வென்றுள்ளார். இத்துடன் மூன்று முறை இந்த விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலீஷ் ப்ரிமீயர் லீக் கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்திருந்தார். 3ஆவது முறை இந்த விருதை வெல்வதன் மூலம், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்த மார்க் ஹியூக்ஸ், ஆலன் ஷியரெர், தியரி ஹென்ரி, ரொனால்டோ, காரத் பேலே, கெவின் டி ப்ரூயின் ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை அல் நசார் க்ளப் எதிர்கொண்டது.
    • 2-1 என்ற கோல் கணக்கில் அல் நசார் க்ளப் வெற்றி பெற்றது.

    சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை அல் நசார் க்ளப் எதிர்கொண்டது. அப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அல் நசார் க்ளப் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்கவில்லை என்றாலும், 61வது நிமிடத்தில் ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு அவர் கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.

    அல் நசார் அணிக்காக முதல் கோப்பையை ரொனால்டோ வெல்வாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

    ×