என் மலர்

    இந்தியா

    மணிப்பூரில் ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்: ஆளுநரை சந்தித்த பின் பாஜக தலைவர் தகவல்
    X

    மணிப்பூரில் ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்: ஆளுநரை சந்தித்த பின் பாஜக தலைவர் தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்துள்ளார். 9 எம்.எல்.ஏ.க்களுடன் தொக்கோம் ராதேஷியாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார்.

    அதன்பின் தொக்கோம் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-

    மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாாக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    நாங்கள் சொன்னதை ஆளுநகர் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனுக்கான நடவடிக்கை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சபாநாயகர் தி. சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை.

    ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்தார்.

    எந்தவொரு சமாதான முன்னெடுப்பிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என மெய்தி பிரிவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குகி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×