இந்தியா

கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் பறந்த டிரோன் போன்ற மர்ம பொருள்: போலீசார் விசாரணை
- கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் மீது 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு.
- உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள முக்கியமான இடங்களில் 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால், உளவு பார்ப்பதற்கான அனுப்பப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலாவில் இருந்து டிரோன் போன்ற மர்மப் பொருட்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகர் கடலில் உள்ள 2-ஆவது ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் தலைமையகம், ஹேஸ்டிங்ஸ் போன்ற இடங்களில் இந்த மர்மபொருள் பறந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானுக்காக உளவு பணியில ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.