என் மலர்

    இந்தியா

    வயலில் கிடைத்த வைரக்கல்: ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறிய பெண் விவசாயி
    X

    வயலில் கிடைத்த வைரக்கல்: ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறிய பெண் விவசாயி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
    • வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார்.

    ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார்.

    அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளை கண்டார். அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனை கண்ட விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு வைரக்கல்லை வாங்க கிராமத்திற்கு வந்தனர். அப்போது பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.

    ஆனால் சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். இதனால் பெண் வியாபாரி ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறினார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×