என் மலர்

    ஆந்திர பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு

    ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் உமாசங்கர். ஊர் காவல் படையை சேர்ந்தவர் கிரண் குமார்.

    இருவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால், அந்த பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால், இவருடைய புகாரை போலீசார் தொடர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து பங்காருபாளையும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாசங்கர், கிரண்குமாரை கைது செய்தனர். இந்த தகவலை பலமனுார் டி.எஸ்.பி. தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
    • ஏழுமலையான் கோவில் நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திரா மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன் ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    உலகம் முழுவதும் இந்துக்கள் இருக்கும் இடங்களில் ஏழுமலையான் கோவில்களைக் கட்டி அவரது சக்தியை அனைத்து திசைகளிலும் பரப்புவது அனைவரின் பொறுப்பு.

    ஏழுமலையானுக்கு பலமுறை பட்டு வஸ்திரங்களை காணிக்கை செய்யும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளார். சிறுவயதில் இருந்து ஏழுமலையானை வணங்கி வளர்ந்தவன்

    எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர் மீது தனது பாரத்தை சுமத்தி முன்னேறினேன். ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியுடன் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.

    மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் இறைவனை வழிபடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டும்.

    அவை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும், அங்கு ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இதற்காக, திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் சில குழுக்களை அமைத்து, அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் பேசி, உலகம் முழுதும் ஏழுமலையான் கோவில்கள் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை ரூ 2,038 கோடியைப் பெற்றுள்ளது. நாங்கள் ரூ. 837 கோடியை செலவிட்டுள்ளோம். இன்னும் ரூ. 1,700 கோடி உள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.

    பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் கார் உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    • டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கியதால், உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விபத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன.
    • வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.

    நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:-

    நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்சினைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம்.

    லக்னோவில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்போம். வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு ஆப்சன் அல்ல. அது அவசியம். இது பெண்களை பயனாளிகளாக மட்டுமல்லாமல், வளர்ச்சி செயல்முறையின் இயக்கிகள், படைப்பாளிகள் மற்றும் தலைவர்களாகவும் நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.

    இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
    • உலகின் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார் ஜே.பி.நட்டா.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.

    இந்தியாவில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது.

    எங்களிடம் 240 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர்.

    பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது.

    மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

    ஜிஎஸ்டியை 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் யுகந்தர். இவருடைய மனைவி மவுனிகா இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தம்பதியின் ஒன்றரை வயது மகன் ரக்ஷித்ராம்.

    மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மகனை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில் மூடியை குழந்தை எடுத்து விழுங்கியது.

    பாட்டில் மூடி தொண்டையில் சிக்கியதால் குழந்தை அலறியது. சத்தம் கேட்டு மவுனிகா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓடி வந்தனர். குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரக்ஷித்ராம் இறந்தது.

    இதைக் கண்டு அவருடைய தாய் கதறி அழுதார். குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார்.
    • ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலத்தில் உள்ள எஸ்.வி.புரம் அஞ்சேரம்மா கோவிலில் எலி ஜோதிடம் சொல்லுதல் பலரையும் கவர்ந்து வருகிறது.

    நாராயணவனம் கிராமத்தில் வசிக்கும் சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார். ஒரு வருடம் முன்பு சென்னைக்கு சென்றபோது அங்கு ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

    எனவே அங்கிருந்து பயிற்சி பெற்ற எலியை வாங்கி வந்தார். சிறிது காலம் பிறகு உள்ளூர் கோவிலில் எலியைக் கொண்டு ஜோதிடம் சொல்லத் தொடங்கினார். இந்த எலியின் பெயர் கணேஷ். எலி விநாயகரின் வாகனம் என்பதால் பலரும் ஜோதிடம் பார்க்க வருவதாக தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

    மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.

    நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
    • இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.

    மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு போன் செய்ததாகக் கூறினார்.

    அவர்கள் அனைவரும் மைலாவரம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது, தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அந்த நபர் ஆன்லைன் மூலம் ரூ. 11,000 பறித்துக் கொண்டார்.

    சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஒரு புதிய வகை போக்கைப் புகுத்துகிறார்கள். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
    • இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஒரு போட்டியில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

    இது புனே அணி பெறும் ஹாட்ரிக் வெற்றி ஆகும். ஏற்கனவே பெங்களூரு, குஜராத் அணிகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும்.
    • அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:

    தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர்.

    புல்லட் ரெயில் சேவை தவிர, தென் மாநிலங்கள் தங்களது சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்த போகிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக தொலைதூர சாலைகளை கூட சிறப்பாக பராமரிப்பது இதில் அடங்கும். இந்தியாவின் பழங்கள் விளைச்சலில் ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயிகளுக்கான புதிய சர்வதேச சந்தைகளை தேடி வருகிறோம்.

    உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் நிறுவனங்களை நிறுவ முதலீட்டாளர்களை வலியுறுத்த புதிய முயற்சிகளுக்கான அனுமதிகளை ஆந்திர அரசு விரைவுபடுத்தும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கால் ஈர்க்கப்பட்ட ஒரு திட்டமான சிலிகான் வேலி திட்டம் அமராவதியில் நிறுவப்படுவதற்கு, எதிர்கால மேம்பாடு குறித்து பில் கேட்சுடன் ஆந்திரா ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.

    ×