என் மலர்

    ஆந்திர பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.
    • ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வததற்காக பெங்களூருவைச் சேர்ந்த சாய்குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் 'விஐபி பிரேக்' தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவர் வைத்திருந்த தரிசன டிக்கெட்டை வாங்கி பார்த்த ஊழியர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், இது பற்றி சாய்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர சட்டசபை மேலவை துணைத்தலைவர் மாயண்ணா ஜாகியா கானம் என்பவர் பரிந்துரை அடிப்படையில், அவரது செய்தி தொடர்பாளர் கிருஷ்ணதேஜா, மற்றொரு நபரான சந்திர சேகர் ஆகியோர், தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.

    இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில், மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் உட்பட 3 பேர் மீதும் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்ட சபை மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி, அவருடைய பரிந்துரை அடிப்படையில் இதற்கு முன்னர் 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்ட பக்தர்களிடம் விசாரணை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
    • 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, "தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    முன்பு நான் ஆட்சியில் இருந்த போது அதிக குழந்தைகளை பெற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் அனைவரும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையைக் குறைத்தீர்கள்.

    முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது.

    தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. கருவுறுதல் விகிதத்தின் தேசிய சராசரி 2.1 ஆக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர்.
    • போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிராடி பேட்டை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாங்கி வந்து அதற்கு மேக்ஸ் என பெயரிட்டனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் குழந்தை போல நாய் செல்லமாக பழகியது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி குண்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டின் கதவு திறந்ததால் நாய் வீட்டில் இருந்து வெளியே சென்றது.

    செல்லமாக வளர்த்து வந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர். அண்டர் பேட்டை போலீசில் புகார் செய்தனர். மேலும் நகரம் முழுவதும் நாய் காணாமல் போனது குறித்து விவரங்களுடன் பேனர் வைத்தனர்.

    நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என நாயின் விவரங்களுடன் துண்டு பிரசுரவும் அச்சடித்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக வழங்கினா்.

    இதற்கிடையே வீட்டிலிருந்து வெளியேறிய நாய் மழையில் நனைந்தபடி சாலை ஒரு ஓரத்தில் தவித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அதன் அருகில் சென்று பிஸ்கட் கொடுத்தார்.

    அவரை கண்டதும் நாய் ஆட்டோவில் ஏறி கொண்டது. இதனை அடுத்து நாயை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தார்.

    நாய் காணாமல் போனது குறித்து விளம்பரங்களை பார்த்து ஆட்டோ டிரைவர் உடனடியாக வினோத்தை தொடர்பு கொண்டு வரவழைத்து நாயை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவருக்கு வினோத் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஆட்டோ டிரைவரை பிரிந்து சென்ற போது நாய் கால்களை தூக்கி அவருக்கு செய்கை காட்டியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுக தமிழக அரசியல் சக்தியாக வேகமாக மாறியது.
    • எம்.ஜி.ஆரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது தொலைநோக்கு ஆட்சிதான்.

    திருப்பதி:

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைமை, உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபர் 17, 1972-ல், புகழ்பெற்ற "புரட்சித் தலைவர்" எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்டது. அதிமுக தமிழக அரசியல் சக்தியாக வேகமாக மாறியது.

    எம்.ஜி.ஆர்., நான் மிகவும் மதிக்கும் தலைவர் அரசியலில் எனக்கு எம்.ஜி.ஆர். தான் முன்மாதிரி, அவருடைய அரசியல் வியூகத்தை கண்டு முன் மாதிரியாக ஏற்றுக்கொள்கிறேன். அவரது வழியில் நடப்பேன்.

    ஏழைகளின் மேம்பாட்டிற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தார், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது, ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியத்துடன் வாழ உரிமை உண்டு.

    எம்.ஜி.ஆரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது தொலைநோக்கு ஆட்சிதான். வளர்ச்சியுடன் நலனை சமநிலைப்படுத்துவதில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை தமிழகத்தை நாட்டின் வளமான மாநிலமாக மாற்றியது. "எம்.ஜி.ஆரின் தலைமை. மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் அவரது அர்ப்பணிப்பு ஒரு நிலையான பாரம்பரியமாக உள்ளது, இது தனிப்பட்ட முறையில் எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.


    ஜெயலலிதாவின் ஆட்சி எம்.ஜி.ஆரின் இலட்சியங்களை முன்னெடுத்துச் சென்றது மட்டுமின்றி, மக்களால் "அம்மா" என்ற மரியாதையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

    அண்டை மாநிலங்களுடன் இணக்கமான உறவை வளர்ப்பதில் அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் தெலுங்கு மொழியின் மீதான மரியாதை-பாரதியாரின் "சுந்தர தெலுங்கு" என்ற சிறந்த வரிகளை நமக்கு நினைவூட்டுவது குறிப்பாக பாராட்டத்தக்கது.

    எடப்பாடி கே.பழனிசாமியின் திறமையான தலைமையின் கீழ், எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய விழுமியங்களையும் தொலைநோக்கு பார்வையையும் அதிமுக தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. சவால்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டு மக்களுக்காக கட்சி வலுவான குரலாக உள்ளது, அதன் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக வேரூன்றி உள்ளது.

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும், அவரது அடிச்சுவடுகளை உண்மையாகப் பின்பற்றி, அ.தி.மு.க அரசை திறம்பட வழிநடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், தமிழகத்தை வளர்ச்சி மற்றும் செழுமையாகவும் கொண்டு செல்வதில் கட்சி தனது பாரம்பரியத்தை தொடர வாழ்த்துகிறேன்.

    "தமிழ் மொழி, பண்பாடு, தமிழர்களின் அடங்காத போராட்ட குணம் ஆகியவற்றின் மீதான எனது மரியாதை நான் எப்போதும் போற்றுகிறேன். இத்தருணத்தில், திருவள்ளுவரின் ஆன்மா, சித்தர்கள், மகான்கள் நிறைந்த தமிழ் தேசத்தை மிகுதியாக ஆசீர்வதிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனமழை காரணமாக திருப்பதி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன.
    • திருப்பதியில் 52 இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    திருப்பதி:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட ராயல சீமா மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த புயல் நேரடியாக சென்னையை தாக்கும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து ஆந்திரா மாநிலத்தில் தென் மாவட்டங்களான திருப்பதி, ராயல சீமா மாவட்டங்கள் வழியாக கரையே கடக்கிறது.

    சென்னை தப்பிய நிலையில் நேற்று முதல் திருப்பதி நெல்லூர் கர்னூல் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருப்பதி மாவட்டத்தில் 22 செ.மீ. மழை பதிவானது.

    கனமழை காரணமாக திருப்பதி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனை உடனடியாக மீட்பு குழுவினர் அகற்றினர்.

    திருப்பதி மலை முதல் கீழ் திருப்பதி வரை எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். திருப்பதி மலையில் உள்ள மால்வாடி குண்டம், கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    திருப்பதியில் 52 இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள 1183 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். திருப்பதி மாவட்டத்தில் மொத்தம் 28 நிவாரணமையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பதியில் பெய்த கன மழை காரணமாக அங்கு வந்த ஒரு விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    நெல்லூர், கர்னூல், கடப்பா மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்தடை ஏற்பட்டது. அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த மாவட்டங்களில் உள்ள ஓடைகள் மற்றும் கால்வாய் நிறைந்து ஓடுவதால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாதாலும் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதாலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக மழையால் பாதிக்கப்பட்டனர்.

    பல இடங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன கடப்பா மாவட்டத்தில் 2500 ஹெக்டேருக்கு மேல் நெல்ப்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அன்னமய்யா மற்றும் கடப்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுகள் அறைகள் அமைத்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போடும் என்ற நிலையில் ஆந்திராவில் தென் மாவட்டங்களை புயல் மழை பந்தாடி உள்ளது. பல மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.
    • மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருமலை:

    கனமழை எச்சரிக்கையால் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை இன்று முதல் மூடப்படுகிறது, என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் காணொலி காட்சி மூலம் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் பேசியதாவது:-

    திருப்பதி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை வரையிலும், அதன்பிறகு அடுத்த 36 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவஸ்தான முக்கியத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பிற துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்கும், ஒவ்வொரு துறையின் தயார் நிலை குறித்தும் விரிவாகக் கேட்கப்பட்டது.

    இடைவிடாத மழையைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள கோகர்ப்பம் சர்க்கிளில் இருந்து தொடங்கும் பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.

    இந்தநிலையில் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக மூடப்படுகிறது. சூறாவளி காற்று, மழை குறைந்த பிறகு இந்த நடைபாதையில் பக்தர்கள் திருமலைக்கு நடந்து வர நடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் ஆலோசனை செய்யப்படும்.

    திருப்பதி மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும், பாறைகள் உருண்டு கீழே விழுந்தாலும் அவற்றை அகற்ற, தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு போதுமான எரிபொருளை (டீசல்) வைத்திருப்பது குறித்து பொறியாளர் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவக் கருவிகள், ஆம்புலன்சுகள், மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவு பொது மேலாளர், பறக்கும்படை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி, மருத்துவக் கண்காணிப்பாளர் (சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்), என்ஜினீயர்கள் உள்பட 15 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைப் பதிலளிப்புப் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    காணொலி காட்சி நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், என்ஜினீயர் சத்யநாராயணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    திருமலை:

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.

    22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

    உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.
    • தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

    கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

    இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடந்த போதிலும் நெல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து.

    திருப்பதி:

    ஆந்திராவில் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பிறகு அரபிக்கடலில் நகர்ந்து மீண்டும் வலுப்பெறும் என்பதால் ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வி.ஐ.பி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 75,361 பேர் தரிசனம் செய்தனர். 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள்.
    • திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் நிறைய ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பக்தர்களுக்கு ஏற்றதாக இங்குள்ள உணவுகள் இருப்பதில்லை காலை, பகல் என எப்போது சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது.

    இந்த நிலையில் தமிழக பக்தர்களை திருப்பதி மலையில் உள்ள வீட்டு இட்லி கடைகள் வெகுவாக கவர்ந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பாலாஜி காலனி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வீடுகளின் முன்பு இட்லி கடைகள் வைத்துள்ளனர். காலையில் இட்லி, தோசை, பூரி, வடை என சுடச்சுட கிடைக்கிறது.

    தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள். ஒவ்வொரு கடைகள் முன்பும் 50-க்கும் மேற்பட்டோர் இட்லிக்காக காத்திருக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன. ருசியாகவும் இருக்கிறது. இந்த கடைகளை கோவில் அருகில் திறக்கவும் தேவஸ்தானம் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. விழாவில் மலையப்ப சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குறிப்பாக, கடந்த 8-ந் தேதி இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி தரிசனம் செய்ய மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் முதல் 8 நாட்களில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும் சிறிய லட்டுகள் 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனையானது. கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

    அதேபோல், உண்டியல் மூலம் ரூ.26 கோடி வசூல் ஆனது. கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது. இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் பக்தர்கள் நலனுக்காக ஆந்திர அரசு பஸ்கள் 2 ஆயிரத்து 800 நடை இயக்கப்பட்டது.

    திருமலையில் விற்பனை செய்யப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இருப்பினும், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும், லட்டு விற்பனையும் குறையவில்லை என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திராவில் தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
    • போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது.

    ஆந்திராவின் கர்னூல் அருகே தேவரக்கட்டு பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் பன்னி திருவிழாவின் முக்கிய அம்சமான சண்டையிடும் சடங்கில், இந்தாண்டு 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. தேவரகட்டு மலையில் மலைமல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. வழக்கம் போல் தசரா தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு மாளம்மா, மல்லேஸ்வர சுவாமிக்கு கல்யாணம் நடந்தது. அதன்பின், மலையின் சுற்றுவட்டாரப் பகுதியில் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. இந்த உற்சவ சிலைகளை பெறுவதற்காக 5 கிராம மக்கள் ஒரு குழுவாகவும், மற்ற 3 கிராம மக்கள் மற்றொரு குழுவாகவும் சேர்ந்து சண்டையிடுவர்.

    பல கிராமத்தினர் குழுவாக பிரிந்து சண்டையிட்டு கொள்ளும் இந்த சடங்கை பாதுகாப்பாக நடத்துவதற்கு 800 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே நடந்த அதிகார மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×