என் மலர்

    ஆந்திர பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
    • மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டூர் பி அருகே தம்மையா டோடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 450 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.

    கோவில் திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.

    இதனைக் கண்ட அந்த கிராமத்து பெரியவர்கள் இனி இந்த கிராமத்தில் யாரும் கோழி வளர்க்க கூடாது, கோழிக்கறியை சாப்பிடக்கூடாது என தடை விதித்தனார்.

    இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் கோழியை வளர்ப்பது இல்லை. கோழிகள் வளர்க்கப்படாததால் அந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாக சேவல் கூவும் சத்தம் கேட்டது இல்லை.

    கோழிக்கறியும் சாப்பிடாமல் உள்ளனர். மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆட்டுக்கறியை மட்டும் சாப்பிட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
    • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

    இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.

    நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
    • வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார்.

    ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார்.

    அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளை கண்டார். அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனை கண்ட விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு வைரக்கல்லை வாங்க கிராமத்திற்கு வந்தனர். அப்போது பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.

    ஆனால் சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். இதனால் பெண் வியாபாரி ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறினார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதேபோல் நேற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 23 வைகுந்தம் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 85,740 பேர் தரிசனம் செய்தனர். 35,555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை.
    • வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருடைய குப்பம் தொகுதியில் வசிக்கும் 250 குடும்பத்தினரை தத்தெடுத்துள்ளார்.

    ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

    அவர் கூறுகையில்:- நான் குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி எனது பொறுப்பு.

    வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானே களம் இறங்கி இதனை நடைமுறைப்படுத்துகிறேன். சமூகத்தில் பொருளாதார இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப்போல மாநிலத்தில் ஏழை குடும்பத்தினரை தத்தெடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது.
    • துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.

    இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

    "துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
    • 3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஆந்திராவில் 2047-ம் ஆண்டுக்குள் முதியவ ர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் என்பதால் அதை மனதில் கொண்டு மக்கள் தொகையை உயர்த்த மேலாண்மை திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது.

    அதன்படி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களை தேடி செல்கின்றனர்.

    செயற்கை முறை கருத்தலுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கான நிதி உதவியை மாநில அரசு வழங்க முன் வந்துள்ளது. இதேபோல் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் குடும்பத்திற்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்க உள்ளது.

    3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தபட உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    விரைவில் இதுகுறித்து புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சலுகை திட்டங்களால் ஆந்திராவில் உள்ள பெண்கள் உற்சாகமாக உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

      திருப்பதி:

      ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், தெந்துலூரு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

      நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அலுவலகங்களுக்கு வந்து செல்பவர்கள் உணவு கிடைக்காமல் செல்வதை கண்டார்.

      இதனால்மக்களின் பசியை போக்க சிவாஜி முடிவு செய்தார்அதன்படி தனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்த அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு வெஜ் பிரியாணி சமைத்து ரூ. 5-க்கு வழங்கி வந்தார்.

      அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார். 10- ரூபாய்க்கு சுவையான வெஜ் பிரியாணி வழங்குவதால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உணவு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • கடைகளைத் திறக்க புதிய விதிமுறை ஒன்றை வியாபாரிகள் கடைபிடித்து வருகின்றனர்.
      • மணி அடிப்பதற்காக ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

      ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பொடிலி, படூர் நகரப் பகுதியில் கடைகளைத் திறக்க புதிய விதிமுறை ஒன்றை வியாபாரிகள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி அங்குள்ள 60 வயது முதியவர் ஒருவர் தினமும் காலை 8 மணிக்கு மணி அடிக்கிறார்.

      அதன் பிறகுதான் அங்குள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்கிறார்கள். இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த நேரத்தில் மணி அடிப்பதற்காக பிரம்மய்யா என்ற ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் இந்த பணியை செய்து வருகிறார்.

      பிரம்மய்யா கடைவீதிகளில் மணி அடித்துக் கொண்டு செல்வதை வெளியூர்க்காரர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
      • இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

      ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் முடிகுப்பாவில் உள்ள தனியார் பள்ளியில் மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

      அதன்படி நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கூடினர். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் மரத்தை கட்டி பிடித்தனர்.

      2 நிமிடங்கள் மரங்களை கட்டிப்பிடித்தபடி நின்றனர். மரத்தை கட்டி பிடித்ததால் ஒரு விதமான மன அமைதி கிடைக்கும், இந்த நடைமுறை தங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.

      இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில்:-

      மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுகிறது.

      மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன்.
      • நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன்.

      நகரி:

      பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

      அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ரோஜா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      எனக்கு பல ஊர்களில் வீடுகள் இருப்பதாக பானு பிரகாஷ் கூறுகிறார். ஐதராபாத், சென்னையில் உள்ள வீடுகள் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன் சம்பாதித்த சொத்துகள். 1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

      தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன். இதுதவிர விளம்பரங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்கள் என்று ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்தேன். ஒரு படத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன். எனது சொத்துகளுக்கும், சம்பளத்துக்கும் கணக்கு இருக்கிறது.

      அப்படியிருக்கும்போது அரசியலுக்கு வந்து ஊழல் செய்து 1,000 கோடி ரூபாய் சம்பாதித்தேன் என்று சொல்வது தவறு. உண்மையாக இருந்தால் பானுபிரகாஷ் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார். அதேசமயம் நிரூபிக்க தவறினால் பானு பிரகாஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலக தயாரா?.

      இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

      ×