என் மலர்

    ஆந்திர பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.
    • அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அப்பலநாயுடு-ஜெயம்மா. இவர்களது மகன் ராஜசேகர்.

    இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் ராஜசேகர், பெற்றோர் என்றும் பார்க்காமல் அப்பலநாயுடுவையும், ஜெயம்மாவையும் டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர்.
    • இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் அஞ்சலில் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தி வருகிறது.

    அவ்வகையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒய்.எஸ்.சர்மிளா, "பஹல்காம் தாக்குதல் நமது நாட்டின் மீதான தாக்குதல். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். பாதுகாப்பு அமைப்பின் குறைபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த விஷயத்தை ஒரு மதத்தின் மீது தாக்குதல் என்று பாஜக தவறாக சித்தரிக்கிறது. அதன் துணை அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் இதே பணியில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் வேதனையானது.

    இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர். இது மதத்தின் மீதான தாக்குதல் அல்ல. இந்தியா மீதான தாக்குதல். இது ஒரு மதத்தின் மீதான தாக்குதல் என்று பாஜக கூறுகிறது. இது ஒரு வேதனையான விஷயம். நாட்டில் மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர்.

    விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.
    • பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆந்திர அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் அமராவதியில் ரூ.65 ஆயிரம் கோடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி பிரதமர் மோடி மே மாதம் 2-ந்தேதி மாலை 4 மணிக்கு அமராவதி வருகிறார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த விழாவில் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம், மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

    பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆந்திர அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், மதுரவாடா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஞானேஸ்வர். இவரது மனைவி அனுஷா (வயது27). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    ஞானேஸ்வர் விசாகப்பட்டினத்தில் பாஸ்ட் புட் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    அனுஷாவை திருமணம் செய்து கொண்டதை ஞானேஸ்வர் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் வேலை செய்து வருவதாக தெரிவித்து வந்தார். தற்போது அனுஷா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் உள்ளதால் உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என அனுஷாவிடம் கூறினார்.

    அதற்கு அனுஷா நாம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் ஒன்றாக வாழலாம். நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் ஞானேஸ்வர் கத்தியால் குத்தினார். அனுஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 13-ந் தேதி திருப்பதி டி.எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    • யாஸ்மின் பானுவின் குடும்பத்தினர் அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

    ஆந்திர மாநிலம், சித்தூர், பாலாஜி நகர் காலனியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவரது மகள் யாஸ்மின் பானு (வயது 26). எம்.பி.ஏ பட்டதாரி.

    சித்தூர் அடுத்த பூதலப்பட்டை சேர்ந்தவர் சாய் தேஜா. பி.டெக் பட்டதாரி. சாய் தேஜாவும், யாஸ்மின் பானுவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாஸ்மின் பானுவின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி நெல்லூரில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் 13-ந் தேதி திருப்பதி டி.எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் யாஸ்மின் பானுவின் குடும்பத்தினர் அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

    இந்த நிலையில் யாஸ்மின் பானுக்கு போன் செய்து அவரது தந்தை சவுக்கத் அலி தனக்கு உடல்நிலை சரியில்லை நேரில் வந்து பார்த்துவிட்டு செல்லவும் என தெரிவித்தார். இதையடுத்து சாய் தேஜா மனைவியை காரில் அழைத்துச் சென்று தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். நேற்று முன்தினம் சாய் தேஜா தனது மனைவிக்கு போன் செய்தார். போனை எடுக்கவில்லை. அவரது தந்தை சவுக்கத் அலி மற்றும் சகோதரர் லாலு ஆகியோரும் போன் எடுக்கவில்லை.

    நேற்று காலை மனைவியின் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் யாஸ்மின் பானு இல்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது யாஸ்மின் பானு தற்கொலை செய்து கொண்டதாகவும் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளதாகவும் அலட்சியமாக தெரிவித்தனர்.

    மேலும் யாஸ்மின் பானுவின் தந்தை சவுக்கத் அலி சகோதரர் லாலு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மனைவியின் பிணத்தை பார்த்த சாய் தேஜா கதறி துடித்தார். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர் மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடுவதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள யாஸ்மின் பானுவின் தந்தை மற்றும் சகோதரரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூசாரியிடம் உதை வாங்குவதற்காக வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.
    • 500 ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னஹோதுரு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்த ராமேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது அருள் வந்து ஆடும் பூசாரி உதைத்தால் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கை உள்ளூர்வாசிகளிடையே உள்ளது. பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் இந்த வினோத திருவிழா சமீபத்தில் நடந்தது.

    இதில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் முடிந்ததும் பூசாரி அருள் வந்து ஆடினார். பூஜை பொருட்கள் அடங்கிய பொருட்களை தலையில் சுமந்து கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு ஆவேசமாக அங்கும் இங்குமாக ஓடி ஆடினார். பூசாரியிடம் உதை வாங்குவதற்காக கோவிலில் இருபுறமும் வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.


    பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு ஆவேசமாக வந்த பூசாரி ஓடி ஓடி பக்தர்களை காலால் எட்டி உதைத்தார்.மேலும் சில பக்தர்களுக்கு காலால் எட்டி உதைக்கும் போது அருள் வாக்கினையும் கூறினார். பூசாரியிடம் உதை வாங்காத பக்தர்கள் தன்னை பூசாரி உடனே மிதிக்க வேண்டும் என இரு கைகளையும் கூப்பி சாமியை வணங்கிய படி நின்றனர்.

    பூசாரியிடம் மிதி வாங்கிய பக்தர்கள் குங்குமம், மஞ்சள் நீர் போன்றவற்றை அர்ச்சனை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். கோவில் பூசாரி பக்தர்களை காலால் எட்டி உதைக்கும் வினோத திருவிழா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    ஆச்சரியப்பட வைக்கும் இந்த வினோத திருவிழாவை பார்த்து வியந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்கு பாரம்பரியத்தை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணமாகி 3 வருடமாகிய நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
    • வாக்குவாதம் அதிகரிக்கவே, கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரிக்க பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விசாகப்பட்டினத்தில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் ஞானேஷ்வர். இவரது மனைவி அனுஷா (வயது27). இவர்களுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அனுஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

    ஞானேஷ்வருக்கும் அனுஷாவுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இன்று காலையும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஞானேஷ்வர், 8 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.

    இதனால் அனுஷா மூச்சுவிட முடியாமல் மயங்கி சரிந்துள்ளார். இதனால் பயந்துபோது ஞானேஷ்வர், மனைவியை உடனடியாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அனுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசில் சரணடைந்துள்ளார். சிறு வாக்குவாதத்தால் கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகையை சுவாசித்ததால், சிறுவனுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
    • அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

    ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய மனைவி அன்ன லெஜினோவா. இவர்களுடைய மகன் மார்க் சங்கர். சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மார்க் சங்கர் படித்து வருகிறான். சமீபத்தில் அந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் மார்க் சங்கர் சிக்கினான். இதில் அவன் லேசான காயம் அடைந்தான். மேலும் புகையை சுவாசித்ததால், நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்து சென்று, மகனுக்கு ஆறுதல் கூறினார். தற்போது சிறுவன் உடல் நலம் தேறியதால், ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளான். இதையடுத்து மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு பவன் கல்யாண் ஐதராபாத் வந்தார்.

    இந்த நிலையில், பவன் கல்யாண் மனைவி அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி, ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.

    முதலில் ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்து தீர்த்த பிரசாதம் பெற்ற பிறகு, புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்தார்.

    தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகனுக்காக பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஜினோவா திருப்பதியில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்து தனது விரதத்தை பூர்த்தி செய்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

    மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பட்டாசு தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையாக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கார்களுக்கு வேகமாக பரவி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த பல கார்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தீ விபத்தில் கார்களின் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×