இந்தியா

கர்நாடகா முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை - மனைவி, மகள் கைது
- ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.
Next Story