இந்தியா

கடுமையான வெப்ப அலை - உ.பி.யில் கோடை விடுமுறை நீட்டிப்பு
- பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பிரயாக்ராஜில் உள்ள உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சிலின் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி, அனைத்து அடிப்படை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உ.பி. முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.