இந்தியா

திட்டுற வேலை வச்சுக்காதீங்க.. திட்டும்போது எதிர்த்து பேசிய மனைவியின் தலையை மொட்டையடித்து விட்ட கணவன்
- அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையை மொட்டையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அவுராய் பகுதியில் உள்ள சியூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணவன் திட்டியதற்கு பபிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
மனைவி தன்னை எதிர்த்தால் ஆத்திரமடைந்த கணவன், பபிதாவை கொலை செய்வதாக மிரட்டி, அவரை தாக்கி, பின்னர் கூர்மையான பொருளைப் பயன்படுத்தி அவரின் தலையை மொட்டையடித்தார்.
மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று முன் தினம் இரவு, பபிதாவும் அவரது தாயாரும் அவுராய் காவல் நிலையம் சென்று, ராம் சாகர் மீது புகார் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் போலீசார் இன்று தெரிவித்தனர்.