என் மலர்

    இந்தியா

    12 மணி நேர வேலை திட்டம் வாபஸ் - கர்நாடக அரசு அறிவிப்பு
    X

    12 மணி நேர வேலை திட்டம் வாபஸ் - கர்நாடக அரசு அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.
    • 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.டி.இ.எஸ். ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

    தற்போது கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் (ஓவர் டைம் சேர்த்து) வேலை பார்க்கலாம் என்ற விதி அமலில் உள்ளது. அதில் திருத்தம் செய்து 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்க இந்த புதிய திருத்த மசோதாவை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது.

    இந்த புதிய சட்ட மசோதா அமல்படுத்தினால் தொழிலாளர்களின் பணி 2 ஷிப்டு முறைக்கு வழிவகுக்கும், ஊழியர்களின் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.

    இந்த மசோதாவின் படி இதற்கு கே.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் ஐ.டி. நிறுவன ஊழியர்களும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இறுதியில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    அதுபோல் கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×