என் மலர்

    இந்தியா

    டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள்: செல்போனில் அரட்டை அடித்த ரெயில்வே ஊழியர் சஸ்பெண்ட்
    X

    டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள்: செல்போனில் அரட்டை அடித்த ரெயில்வே ஊழியர் சஸ்பெண்ட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
    • நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

    ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×