என் மலர்

    இந்தியா

    அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர் - கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்
    X

    அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர் - கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
    • நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

    சுற்றுலா செல்லும் போது ஆபத்தான பகுதிக்கு செல்லாதீர்கள்....அங்கு நின்று படம் எடுக்காதீர்கள்... என பல சுற்றுலா தலங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பதை அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் இன்று பலர்.

    சீறி வரும் கடல் அலை களுக்கு மத்தியில் உள்ள பாறைகளில் நின்று செல்பி எடுப்பது, மலை உச்சி, ஓடும் ரெயில், பைக் சாகசம் என பலவற்றையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் சில நேரங்களில் ஆபத்தையும் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சுற்றுலா சென்ற வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தால் அருவி பாறையில் சறுக்கி அந்தரத்தில் தொங்கி உள்ளார். அவரை உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.

    மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவர்கள், நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு வந்தனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகள் ஆபத்தானவை. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனை மீறி ஆபத்தை உணராமல் 4 வாலிபர்களில் ஒருவர் சென்று அருவி தண்ணீர் விழும் ஆபத்தான பாறையில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி உள்ளது. இதனால் அவர் அபய குரல் எழுப்பிய வாறே கீழ்நோக்கி சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டனர்.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது பாறையில் வழுக்கி விழுந்த வாலிபர் பாறையோடு ஓட்டிய நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக கயிறு கட்டி உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டனர். பாறையோடு வழுக்கிச் சென்ற வாலிபரின் கால் அங்கிருந்த மற்றொரு பாறையில் தட்டியதால் அவர் அந்தரத்தில் நின்றுள்ளார். இதனால் தான் அவரை மீட்க முடிந்தது. இது ஆபத்தான இடம். இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளில் 12 பேர் பலியாகி உள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×