என் மலர்

    கேரளா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.
    • தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் (வயது 25). இவர் தனியார் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கோழிக்கோடு அரிக்குளம் பகுதியில் சுகைல் காரில் பணத்துடன் சென்றபோது, பர்தா அணிந்த 2 பேர் வழிமறித்து தாக்கியதோடு ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

    மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சுகைலை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    முதலில் ரூ.25 லட்சம் பறிபோனதாக கூறிய அவர், பின்னர் ரூ.75 லட்சம் என்று கூறினார். பெரிய தொகை கொண்டு செல்லும் போது அவர் ஏன் துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகைல், திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகைல், அவனது கூட்டாளிகள் தாஹா மற்றும் யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிதின்ராஜ் கூறுகையில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்ப, ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகைல், சில காலமாகவே பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். தற்போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி முதலில் அவர் நாடகமாடினார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை.
    • இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

    இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.

    இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது

    பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
    • 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    பலவருடங்கள் கழித்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா காந்தி கேரள வர இருப்பதாக, மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    வரும் செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்கள். இதில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்பதால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டமன்ற தொகுதிகளுடன் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 23-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் சுமார் 3,64,422 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவை வீழ்த்தினார்.

    வயநாட்டில் பிரியங்கா காந்தியை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்றி வரகிறார்கள்.

    காஙகிரஸ் கட்சியின் பொது செயலாளரும், அமைப்பாளருமான கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக செயல்பட இருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல்.

    கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரில் பணத்துடன் சென்றவரை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    ஆனால், சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உள்பட 2 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், "பர்தா அணிந்திருந்த பெண் கும்பல், காரில் லிப்ட் கேட்டு ஏறியதாகவும், தன் மீது மிளகாய் பொடியை தூவி, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாகவும்" போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரியங்கா காந்தி வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
    • நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிர தேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, வய நாடு தொகுதி எம்.பி. பதவி யை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

    மனு தாக்கலுக்கு முன்னதாக அன்றைய தினம் அவர், தனது சகோதரரும், நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் வயநாட்டில் ரோடுஷோவில் பங்கேற்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிய நிலையில், பா.ஜ.க சார்பில் களம் இறங்கப் போவது யார்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் வயநாடு தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நவ்யா ஹரிதாசை, பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    வயநாடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நவ்யா ஹரிதாஸ், தற்போது கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

    2 முறை இந்த மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது தேவர்கோவிலிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அவர் மீண்டும் தேர்தல் களம் இறங்க உள்ளார்.


    36 வயதான நவ்யா ஹரிதாஸ், பி.டெக் என்ஜினீயர் ஆவார். பா.ஜ.க.வில் வளர்ந்து வரும் பெண் தலைவராக கருதப்படும் இவர், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியினரிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

    வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நவ்யா ஹரிதாஸ் கூறுகையில், வயநாட்டில் உள்ள மக்களுக்கு சில முன்னேற்றம் தேவை. ராகுல்காந்தி வயநாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வில்லை.

    வயநாடு மக்களுக்கு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. உள்ளூர் நிர்வாகத்தின் பின்னணியுடன் பொது சேவையில் எனக்கு அனுபவம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அரசியல் துறையில் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அவர்களுடன் எப்போதும் இருந்து வருகிறேன் என்றார்.

    வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். எனவே அங்கு தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.

    இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாத பூஜை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.


    கூட்ட நெரிசலை தவிர்க்க நிமிடத்திற்கு 80 முதல் 90 பக்தர்களை 18-ம் படி வழியாக கொண்டு சென்றால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

    பொதுவாக மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீஸ் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது 170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

    இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது.

    மாத பூஜையில் வரலாறு காணாத கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இனி மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சொல்கிறது.

    முதலில் முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு முறையில் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பக்தர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் கூட அவதிக்குள்ளானார்கள். இதுதவிர ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மீது கூறப்பட்டது.

    அதே சமயத்தில் உடனடி முன்பதிவு மூலம் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என அரசு கருதியது. எனவே இந்த முறை முதலில் உடனடி முன்பதிவு ரத்து அறிவிப்பும், பின்னர் பக்தர்களின் எதிர்ப்பால் ரத்து அறிவிப்பு வாபசும் பெறப்பட்டது.

    அரசின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் முன்பதிவு முறைக்கு 80 ஆயிரம், உடனடி முன்பதிவு முறைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசின் தற்போதைய குழப்பமான அறிவிப்பு மற்றும் கடந்த மண்டல பூஜை சமயத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியில் குளறுபடி போன்ற காரணத்தால் சீசன் காலத்தில் நிம்மதியாக ஐயப்பனை தரிசிக்க முடியாது என நினைத்த பக்தர்கள், முன்கூட்டியே இந்த ஐப்பசி மாத பூஜைக்கு ஒருசேர ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் மாத பூஜையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம்(17-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்த நிலையில், இன்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தி அனுப்பவும் போதிய போலீசார் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    • வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

    தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். ஓரிரு நாளில் பாரதிய ஜனதா வேட்பாளர் யார்? என்பது தெரிந்துவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் வருகிற 22-ந்தேதி கேரளா வருகிறார். மறுநாள் (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார். தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
    • இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர். அவர்கள் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் படங்கள் அடங்கிய பிரசார போஸ்டர்கள் மற்றும் பேனர்களை அமைத்தனர். மேலும் பிரசாரம் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளையும் தொடங்கினர்.


    தேர்தல் பணிகளை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சியினர் முதலில் களமிறங்கிய நிலையில், தேர்தல் களம் காண இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையே மேற்கொண்டு வந்தது.

    இந்தநிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இடது ஜனநாயக முன்னணி நேற்று மாலை அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 3 முறை கண்ணூர் மற்றும் நாதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்தநிலையில் தற்போது அவருக்கு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மட்டும் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது? என்று தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

    வேட்பாளர் தேர்வுக்கான இறுதி பட்டியில் கட்சியின் தலைமையிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரது பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.
    • கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு களம் இறங்கவுள்ளதாக நேற்று இரவு பரபரப்பு தகவல் வெளியானது. பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக மலையாள செய்தி சேனல்களில் நேற்று தகவல் வெளியானது.

    இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழத்தான் செய்கின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பா.ஜ.க. சார்பில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது.

    இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை. கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    ×