என் மலர்

    கேரளா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு
    • பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பப்பட்டது

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.

    இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்து பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    நடிகை பாலியல் வழக்கு தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சமயத்தில் கேரளாவில் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
    • முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. 

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.

    இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.

    "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.

    பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
    • கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது.
    • கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வென்றுள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:

    எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும்.

    தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னோக்கி செல்வோம்.மதவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் இரையாகிவிட கூடாது என்பதை உறுதிசெய்ய கூடுதல் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களின் இந்த தீர்ப்பு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    இடதுசாரிகள் 45 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் பா.ஜ.க. தன்வசப்படுத்தியுள்ளது. பாலக்காடு திரிபுனிதுரா நகராட்சிகளையும் பா.ஜ.க. வென்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
    • திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் பாராட்ட விரும்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.

    பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்றகாங்கிரசின் UDF -க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையும் ஆகும்.

    கடின உழைப்பு, ஒரு வலுவான செய்தி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த முடிவை அடைய உதவியுள்ளன.

    திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன், ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியமைப்பில் ஒரு தெளிவான மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்.

    அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக UDF-ஆக இருந்தாலும் சரி, அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

    கேரளாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்!" என்று தெரிவித்துள்ளார். அணமைக் காலமாக சசி தரூர் பாஜக மற்றும் மோடியை புகழ்ந்து வருவது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.

    UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.

    ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.      

    தேர்தல் முடிவுகள் விவரம்:

    152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் UDF - 79, LDF - 63

    14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF - 7, LDF - 7

    87 நகராட்சிகளில் UDF - 54, LDF - 28, NDA - 1, மற்றவை - 1

    6 மாநகராட்சிகளில் UDF - 4, LDF - 1, NDA - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
    • பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்புரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

    திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
    • காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது. 

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
    • முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.


    வாக்கு எண்ணக்கை மையம் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    காலை 8.30 மணியளவில் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கியது. காலை 9.45 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், தேசய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.

    இதேபோல் மாநிலத்தில் உள்ள 86 நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 340 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
    • தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது. மண்டல பூஜையையொட்டி வருகிற 26, 27-ந் தேதிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த 2 நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும் 26-ந் தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கும், மண்டல பூஜை தினமான 27-ந் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் முடிவடைந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த 2 நாட்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், உடனடி தரிசனத்திற்கான எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரைவர் அக்‌ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய்(வயது23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி(16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.

    அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பஸ் வந்தது.

    அந்த பஸ்சும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    ஆட்டோ டிரைவர் அக்ஷய் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்ணை மீட்டு அஞ்சல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அஞ்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்
    • நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது முழு திருப்தி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள அரசு ஆதரவாக உள்ளது. நடிகைக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி இருந்தது. இனியும் அது தொடரும் என்றார். அப்போது அவரிடம், ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் நடிகர் திலீப்புக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது ஜனநாயக முன்னணியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நடிகர் திலீப் மீது சதி திட்டம் தீட்டி குற்றம் சுமத்தப்பட்டதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால், அதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.

    ×