என் மலர்

    கேரளா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
    • மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.

    திருவனந்தபுரம்:

    பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.

    மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:

    இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.

    மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன.

    கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கரிப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    கேரள மாநிலத்தில் பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையத்தில் ஒன்றாக கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சு வாகனம் உள்ளிட்டவைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

    வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. விமான நிலையம் அருகில் என்பதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக மஞ்சேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அதிநவீன தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன.

    தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 4 பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு உள்ளிட்ட 5 வாகனங்களும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது தெரியவில்லை.

    தீப்பிடித்த 4 பஸ்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் இருந்து முனையத்திற்கும், முனையத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானத்திற்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். அந்த வாகனத்தை இயக்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பஸ்களுக்கு யாரேனும் மர்மநபர்கள் தீ வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க, விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடினர்.
    • பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுஹைல் (வயது20). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் வசித்துவரும் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்திருந்தார்.

    அப்போது அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அறிமுகமானார். சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அதனையறிந்த சுஹைல், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சுஹைல் கேரளாவில் இருந்து தப்பிச் சென்றார். வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பந்திரங்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுஹைலை வலைவீசி தேடினர். ஆனால், தான் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவைகளை கேரளாவிலேயே கைவிட்டுவிட்டு தப்பியதால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நேரத்தில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கோழிக்கோடு பந்திரங்காவில் தங்கியிருந்த சுஹைலின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபடி இருந்தனர். இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் இருக்கும் தகவல் பந்திரங்காவு போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா மாநில போலீசாரின் உதவியுடன் சுஹைலை தேடினர். பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    பின்பு அவரை அங்கிருந்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமக்கிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.

    சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

    உன்னிகிருஷ்ணன் போற்றி மீது துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை சன்னதி படிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அத்துடன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான கோவர்தன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜைகளை செய்ததாகவும், அங்கு சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.

    இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நடிகர் ஜெயராம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவரிடம் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதன் மூலம் வருகிற நாட்களில் நடிகர் ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று, திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக மணியன்பிள்ளை ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

    விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.
    • நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    சபரிமலையில் தங்கம் கொள்ளை போன விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சிறையில் உள்ள தந்திரி கண்டரரு ராஜீவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்த பணத்தை தந்திரி திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தந்திரி முதலீடு செய்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடப்பட்ட நிதி நிறுவனத்திலும், அதை நடத்தி வந்த என்.எம்.ராஜு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ராஜு ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன.
    • சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை வைபவத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு வைபவத்திலும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மகரவிளக்கு பூஜை வைபவம் முடிந்தபிறகு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு கோவில் மேல்சாந்திகள் மற்றும் தேவசம் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோவிலை விட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் சன்னிதானம் அருகே உள்ள விடுதியில் தங்கியிருப்பர்.

    அதேபோன்று இந்த ஆண்டும் மகரவிளக்கு வைபவம் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு மேல்சாந்திகள், அவர்களது உதவியாளர்கள், தேவசம் ஊழியர்கள், பாதுகாப்பு காவலர்கள், போலீசார், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் என சுமார் 65 பேர் சன்னிதானம் அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.

    அவர்கள் ஈக்கள் தொல்லையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுகள் தேக்கம் காரணமாக ஈக்கள் அதிகளவில் பெருகி விட்டதால், விடுதியில் தங்கியிருப்பவர்கள் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் ஈக்கள் தொல்லையால் உணவு சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சபரிமலையில் புனித யாத்திரை காலத்தின்போது சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பக்தர்கள் திரளக்கூடிய அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இருந்தபோதிலும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கும்.

    அவற்றை அகற்றும் பணி யாத்திரை காலம் முடிந்தபிறகு தூய்மை படை மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டும் தூய்மை படை மூலம் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேங்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன.

    பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன. இருந்தபோதிலும் பல இடங்களில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஈக்கள் அதிகமாக பெருகிவிட்டது. அவை எல்லா இடங்களிலும் மொய்த்தபடி இருக்கிறது.

    இரவு, பகல் என்று இல்லாமல் அனைத்து நேரங்களிலும் ஈக்கள் அனைத்து இடங்களிலும் மொய்த்தபடி இருப்பதால் சன்னிதான விடுதியில் தங்கியிருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உணவு சாப்பிடக்கூட சிறிய அளவிலான மின் விசிறியை கையில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது.

    மேலும் தபால் அலுவலகம், துணை மின் நிலையம், நீர்ப்பாசன அலுவலகம், பி.எஸ்.என்.எல். மற்றும் வனத்துறை அலுவலகங்களில் தங்கியிருக்கக்கூடிய ஊழியர்களும் இதே பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

    சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.

    சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை இன்னும் பெய்யவில்லை. கோடை மழை பெய்தால் ஈக்கள் தொல்லை குறையும் உன்று உள்ளூர்வாசிகளும், தேவசம்போர்டு ஊழியர்களும் கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
    • நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது.

    இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
    • பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(வயது38). கிறிஸ்தவ பாதிரியாராக இருக்கிறார்.

    இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.

    அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சிறுவர்கள் இருவரும் கேரளாவில் இருந்தனர். இந்தநிலையில் சிறுவர்கள் இருவரையும் தான் பராமரிப்பதாக கூறியிருக்கிறார்.

    அதன்படி கேரளா வந்ததும் சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த அண்ணன்-தம்பியான சிறுவர்கள் இருவருக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    சிறுவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பாதிரியாரின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே, அதுகுறித்து சிறுவர்கள் இருவரும் தங்களின் தாய்க்கு தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் தாய், பாதிரியார் மீது வடகரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    தாயின் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிரியார் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாதிரியாரை பிடிக்க தனிப்படை போலீசார், பெங்களூரு விரைந்தனர்.

    அவர்கள் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் சம்பத்தை கைது செய்தனர். பின்பு அவரை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர் கேரள மாநிலத்தில் வடகரா, முடப்பிலவு, தட்டொலிக்கரா உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி, டெல்லி மற்றும் பெங்களூரு, மைசூருவிலும் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். அந்த இடங்களிலும் அவர் இது போன்று வேறு சிறுவர்களிடம் அத்துமீறினாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
    • இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

    உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் உம்மர்பாரூக், தனது குடும்பத்துடன் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள், தங்களுக்குள் பிரச்சனை இருக்கும் 10 சென்ட் நிலம் தொடர்பாக பேசியிருக்கின்றனர்.

    இதனால் உம்மர் பாரூக் மற்றும் அவரது தங்கை கணவர் ஷேகுஞ்சி(வயது53) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களின் மகள் படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் நிலத்தை எழுதித் தர முடியாது என்று உம்மர் பாரூக் மனைவியின் தங்கை மற்றும் ஷேகுஞ்சி ஆகியோர் மறுத்துவிட்டனர்.

    அதில் ஆத்திரமடைந்த உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள் ஜூமைலா, தனது தந்தையை தடுத்தார். அப்போது மாணவி ஜூமைலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.

    உம்மர் பாரூக்கின் தாக்குதலில் சிக்கி கத்திக்குத்து காயமடைந்த அவரது மகள் ஜூமைலா மற்றும் மனைவியின் தங்கை கணவர் ஷேகுஞ்சி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவி ஜூமைலா பரிதாபமாக இறந்துவிட்டார். ஷேகுஞ்சிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மாணவி கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து உம்மர் பாரூக்கை கைது செய்தனர். உம்மர் பாரூக் மோதலில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தாக்குதலின் போது மகளை கவனிக்காமல் கத்தியால் குத்திவிட்டதாக தெரிகிறது.

    குடும்பத்தினர் மோதலில் விலக்கிய மாணவி, பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் காசர்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
    • மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.

    அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.

    மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.

    மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

    தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×