என் மலர்

    கேரளா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர்.
    • சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்த ரஞ்சிதா நாயர்(வயது39). 9 ஆண்டுகள் ஓமனில் நர்சாக பணியாற்றிய இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு சென்றார்.

    அங்கும் நர்சாக வேலை பார்த்து வந்த ரஞ்சிதா நாயருக்கு, கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நர்சு வேலை கிடைத்தது. அவரது சொந்த ஊரான கோழஞ்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலேயே அவருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

    அந்த வேலையில் சேருவதற்காக, லண்டனில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்ய ரஞ்சிதா நாயர் முடிவு செய்தார். இதற்காக அவர் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது தான் விமான விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

    விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர். மகன் 10-ம் வகுப்பும், மகள் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பாட்டி துளசியுடன் இருந்து வருகின்றனர்.

    ரஞ்சிதா சென்ற விமானம் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த விபத்தில் அவர் உயிர் தப்பியிருப்பார் என்றே நினைத்தனர். இந்த நிலையில் விமான விபத்தில் ரஞ்சிதா பலியாகிவிட்ட தகவல் பத்தினம்திட்டா கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

    அதனைக்கேட்டு ரஞ்சிதாவின் தாய் துளசி மற்றும் குழந்தைகள் உடைந்து போனார்கர். சில நாட்களுக்கு முன்பு தங்களுடன் இருந்த அவர், பலியாகிவிட்டதை நினைத்து கதறினர். நேற்று வரை தன்னை கொஞ்சிய தாய் இறந்துவிட்டதை நினைத்து, ரஞ்சிதாவின் மகள் இதிகா மிகுவும் வேதனையடைந்தார்.

    அவர் தனது பாட்டியை கட்டிப்பிடித்து அழுதபடியே இருந்தார். சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாட்டியை கட்டிப்பிடிதத்து சிறுமி கதறி அழுதது, ஆறுதல் கூறச்சென்ற அக்கம்பக்கத்து வீட்டினரை கண் கலங்க செய்தது.

    ரஞ்சிதா அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். அதிலும் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார். இதனால் அவரது மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.
    • ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர் (வயது39). இவர் ஓமனில் 9 ஆண்டுகள் நர்சாக பணி செய்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.

    இந்தநிலையில் ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. இதற்காக கேரளா வந்த அவர் லண்டனில் பணியாற்றிய ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார்.

    இதற்காக அவர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்த நிலையில் விமான விபத்தில் நர்சு பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
    • கடலில் மாயமான 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    இலங்கையின் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 9ம் தேதி சென்று கொண்டிருந்தது.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். தகவலறிந்து அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சூரத் மூலம் நடுக்கடலில் தத்தளித்த 18 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது. கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான்காம் வகுப்பில் பாலகிருஷ்ணனை ஏன் தாக்கினாய் என்று இரு நபர்களும் பாபுவிடம் கேட்டுள்ளனர்.
    • இந்தத் தாக்குதலில் பாபுவுக்கு இரண்டு பற்கள் உடைந்தது.

    கேரளாவின் காசர்கோட்டில் 52 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளிச் சண்டையின் பகையை மனதில் வைத்து, இரண்டு முதியவர்கள் தங்கள் முன்னாள் வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர்.

    பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள நடக்கல் எய்டட் யுபி பள்ளியில் 52 வருடங்கள் முன்பு தங்களுடன் நான்காம் வகுப்பு படித்த வி.ஜே. பாபு (62) என்பவரைத் தாக்கியதாக மாலோத்து பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியபிளாக்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் 2 ஆம் தேதி மாலோம் நகரில் உள்ள ஜனரங்கன் ஹோட்டல் முன் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    போலீஸ் தகவலின்படி, பாலகிருஷ்ணன் பாபுவைத் தரையில் சாய்த்துக்கொண்டபோது, மேத்யூ கல்லைப் பயன்படுத்தி அவரது முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளார். நான்காம் வகுப்பில் பாலகிருஷ்ணனை ஏன் தாக்கினாய் என்று இரு நபர்களும் பாபுவிடம் கேட்டுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் பாபுவுக்கு இரண்டு பற்கள் உடைந்ததாகவும், கன்னூரில் உள்ள பிரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளரிகுண்டு ஆய்வாளர் டி.கே. முகுந்தன் தெரிவித்தார்.

    போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நீண்டகாலப் பகையும், மதுபோதையில் இருந்ததும் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பாபு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கப்பலில் 22 ஊழியர்கள் இருந்த நிலையில், பலரும் கடலில் குதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • 4 பேர் மாயமாகி இருப்பதாகவும் 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கேரளா அருகே நடுக்கடலில் எம்.வி. வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    கொழும்புவில் இருந்து வந்து கொண்டிருந்த கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கப்பலில் 22 ஊழியர்கள் இருந்த நிலையில், பலரும் கடலில் குதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    4 பேர் மாயமாகி இருப்பதாகவும் 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து இந்திய கடலோர காவல் படையின் பல்வேறு ரோந்து கப்பல்கள் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். குறிப்பாக மண்டல மகர விளக்கு சீசன் காலங்களில் பக்தர்களில் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு காரணங்களால் பக்தர்கள் சிலர் சில நேரங்களில் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை தவற விடுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் கடந்த மண்டல சீசன் முதல் இதுவரை ஐயப்ப பக்தர்களின் 230 செல்போன்கள் காணாமல் போனதாக பம்பை போலீசில் புகார் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அந்தவகையில் இதுவரை 102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
    • புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

    கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

    புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
    • நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

    சுற்றுலா செல்லும் போது ஆபத்தான பகுதிக்கு செல்லாதீர்கள்....அங்கு நின்று படம் எடுக்காதீர்கள்... என பல சுற்றுலா தலங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பதை அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் இன்று பலர்.

    சீறி வரும் கடல் அலை களுக்கு மத்தியில் உள்ள பாறைகளில் நின்று செல்பி எடுப்பது, மலை உச்சி, ஓடும் ரெயில், பைக் சாகசம் என பலவற்றையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் சில நேரங்களில் ஆபத்தையும் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சுற்றுலா சென்ற வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தால் அருவி பாறையில் சறுக்கி அந்தரத்தில் தொங்கி உள்ளார். அவரை உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.

    மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவர்கள், நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு வந்தனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகள் ஆபத்தானவை. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனை மீறி ஆபத்தை உணராமல் 4 வாலிபர்களில் ஒருவர் சென்று அருவி தண்ணீர் விழும் ஆபத்தான பாறையில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி உள்ளது. இதனால் அவர் அபய குரல் எழுப்பிய வாறே கீழ்நோக்கி சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டனர்.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது பாறையில் வழுக்கி விழுந்த வாலிபர் பாறையோடு ஓட்டிய நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக கயிறு கட்டி உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டனர். பாறையோடு வழுக்கிச் சென்ற வாலிபரின் கால் அங்கிருந்த மற்றொரு பாறையில் தட்டியதால் அவர் அந்தரத்தில் நின்றுள்ளார். இதனால் தான் அவரை மீட்க முடிந்தது. இது ஆபத்தான இடம். இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளில் 12 பேர் பலியாகி உள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
    • கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. அழகும் திறமையும் கொண்ட இவருக்கும், பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ரேஷ்மா முதல் நாள் திருவனந்தபுரம் வேம்பாயம் அழைத்து வரப்பட்டார்.

    அவரை தனது நண்பர் வீட்டில் வருங்கால கணவரான பஞ்சாயத்து உறுப்பினர் தங்க வைத்தார். அப்போது அவருக்கு ரேஷ்மா பற்றி சில தகவல்கள் கிடைத்தன. மேலும் அவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இந்த நிலையில் திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது உடமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்தார். அப்போது ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். இந்த விவரங்கள் தெரியாமல் ரேஷ்மா அலங்காரம் முடித்து திரும்பியபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரேஷ்மாவுக்கு திருமணம் புதிதல்ல... அவர் பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.

    மேலும் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் எப்படி? மாறி மாறி ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? என விசாரித்த போது, ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும், அதில் வரும் திருமண வரன் தகவல்களை சேகரித்தும் ரேஷ்மா திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.

    திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றி உள்ளார். ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல தற்போது அவர் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய காரணமான பஞ்சாயத்து உறுப்பினர் இது பற்றி கூறுகையில், திருமண விளம்பர குழுவில் எனது செல்போன் நம்பரை நான் பதிவு செய்திருந்தேன். அந்த எண்ணுக்கு கடந்த மாதம் (மே) 29-ந்தேதி அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் தான் பெண்ணின் தாய் என அறிமுகப்படுத்திக் கொண்டு ரேஷ்மாவின் செல்போன் எண்ணை கொடுத்தார். அதன் மூலம் ரேஷ்மாவிடம் பேசினேன். பின்னர் நாங்கள் 2 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மாலில் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும், தனக்கு திருமணம் செய்து வைப்பதில் தாய்க்கு ஆர்வம் இல்லை என்றும், அவர் தன்னை துன்புறுத்துவதாகவும் ரேஷ்மா கூறினார்.

    இதனை நம்பிய நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். அப்போது திருமண விழாவில் தனது தரப்பில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ரேஷ்மா தெரிவித்தார். அதன்பிறகே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதாலேயே உடமைகளை சோதனை செய்தேன். அப்போது தான் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தன என்றார்.

    இதற்கிடையில் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்த நபரையும் தற்போது அழைத்து வந்ததாக போலீசாரிடம் ரேஷ்மா தெரிவித்தார். இதனை கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கதை சொல்லி பலரை திருமணம் செய்த கல்யாண ராணி ரேஷ்மா, 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் சமீப காலமாக புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து தாக்கி வருகிறது. இதில் உயிர்ப்பலியும் நடந்துள்ளது.

    இந்த நிலையில் முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 35 வயதான யானை இறந்து கிடந்தது. அந்த யானை மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    அந்த பகுதியில் வன நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் தான் யானை சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகே இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான்பத்தேரி வனசரக அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார்.
    • ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.

    இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார்.
    • குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

    இந்த வீடியோ காட்சியை கண்டு ரசித்த கேரள பொது கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நேற்று பத்தனம்திட்டாவில் சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார். அதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்படி வழக்கமாக வழங்கப்படும் இட்லி- சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி-பயிறு, பாயாசம், அவித்த தானிய வகைகளுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மதிய உணவாக முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சிறுவன் சங்குவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

    ×