என் மலர்

    இந்தியா

    1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு
    X

    1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மராத்தி, ஆங்கில மீடியம் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம்.
    • இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3-வதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்தது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3-வது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1-ம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2, 3, 4 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×