என் மலர்

    இந்தியா

    ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை பார்த்ததில்லை: மல்லிகார்ஜுன கார்கே
    X

    ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை பார்த்ததில்லை: மல்லிகார்ஜுன கார்கே

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திரத்திற்குப் பிறகு துணை சபாநாயகர் பதவியை யாரும் காலியாக வைத்திருக்கவில்லை.
    • ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். இந்தச் செயல் சட்டவிரோதமானது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று கலபுரகி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமர் மோடி எப்போதும் ஜனநாயகம், ஜனநாயகம் என்றுதான் சொல்வார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தப் பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். மோடியின் இந்தச் செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.

    துணை சபாநாயகர் பதவியை, ஒரு சிறிய பதவியைக் கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசியலமைப்பின் படி அது வழங்கப்பட வேண்டும் என நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நாட்டில் அரசாங்கம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.

    கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் பொய் சொல்கிறார். அவர் ஒருபோதும் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை.

    முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பு (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் திட்டம்) பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, அங்கும் வடகிழக்கு பகுதிக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் செய்யும் பணிகளுக்கு அவர் (பிரதமர் மோடி) அதை முன்னெடுத்துச் சென்று திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.

    Next Story
    ×