என் மலர்

    இந்தியா

    மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் சமையல்காரர்- தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்
    X

    மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் சமையல்காரர்- தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்த சமையல்காரரும் இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை.
    • மும்பை சமையல்காரர் குறித்த தகவல் அறிந்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

    மும்பையை சேர்ந்த சமையல்காரர் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமையல் செய்து வருகிறார்.

    ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார். அதற்குள் குடும்பத்தினர்கள் கேட்கும் அனைத்து உணவுகளையும் ருசியாக செய்து அசத்தி விடுகிறார். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

    இது குறித்து மும்பையை சேர்ந்த ஆருஷி தோஷி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சமையல்காரர் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய சமையல்காரரை மும்பை மகராஜ் என்று தான் அழைப்பேன். அவர் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு நன்கு தெரிந்தவர். அவர் தினமும் 12 வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதந்தோறும் ரூ.18000 சம்பளம் வாங்குகிறார்.

    எந்த சமையல்காரரும் இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. இது நம்ப முடியாததாக இருந்தாலும் அந்த அளவுக்கு கேட்பதற்கு தகுதியும் உடையவர். அந்த அளவிற்கு அவருடைய சமையல் ருசியானது. மேலும் கேட்பதை உடனே செய்து கொடுத்து அசத்தி விடுவார்.

    இதனால் இவருக்கு தற்போது அதிக வீடுகளில் வேலைவாய்ப்பு வருகிறது. தற்போது உள்ள நிலையில் நன்கு படித்தவர்கள் கூட இவ்வளவு சம்பளம் பெற முடியாது.

    திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு என்னுடைய சமையல்காரர் மகராஜ் ஒரு உதாரணம் என தெரிவித்துள்ளார்.

    மும்பை சமையல்காரர் குறித்த தகவல் அறிந்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இவர் சமையல்காரரா? அல்லது ஏஐ தொழில்நுட்ப எந்திரமா என விமர்சித்துள்ளனர். சமையல்காரர் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×