என் மலர்

    இந்தியா

    இது மதத்தின் மீதான தாக்குதல் அல்ல, இந்தியா மீதான தாக்குதல் - பாஜகவை விமர்சித்த ஒய்.எஸ். சர்மிளா
    X

    இது மதத்தின் மீதான தாக்குதல் அல்ல, இந்தியா மீதான தாக்குதல் - பாஜகவை விமர்சித்த ஒய்.எஸ். சர்மிளா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர்.
    • இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் அஞ்சலில் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தி வருகிறது.

    அவ்வகையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒய்.எஸ்.சர்மிளா, "பஹல்காம் தாக்குதல் நமது நாட்டின் மீதான தாக்குதல். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். பாதுகாப்பு அமைப்பின் குறைபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த விஷயத்தை ஒரு மதத்தின் மீது தாக்குதல் என்று பாஜக தவறாக சித்தரிக்கிறது. அதன் துணை அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் இதே பணியில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் வேதனையானது.

    இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர். இது மதத்தின் மீதான தாக்குதல் அல்ல. இந்தியா மீதான தாக்குதல். இது ஒரு மதத்தின் மீதான தாக்குதல் என்று பாஜக கூறுகிறது. இது ஒரு வேதனையான விஷயம். நாட்டில் மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×