என் மலர்

    இந்தியா

    பீகாரில் முதற்கட்ட SIR பணி நிறைவு: 35 லட்சம் பேர் புலம் பெயர்ந்தவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள்..!
    X

    பீகாரில் முதற்கட்ட SIR பணி நிறைவு: 35 லட்சம் பேர் புலம் பெயர்ந்தவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள்..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்துள்ளது.
    • 35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி 35 லட்சம் வாக்காளர்கள் வெளிமாநிலத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

    பீகார் மாநிலத்தில் சுமார் 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 22 லட்சம் வாக்காளர்கள் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் ஃபார்ம் திரும்பப்பெறவில்லை. 7.23 கோடி வாக்காளரிடம் இருந்து ஃபார்ம் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

    7.23 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள். அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×