என் மலர்

    இந்தியா

    விழிஞ்சம் துறைமுகத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகை
    X

    விழிஞ்சம் துறைமுகத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது விழிஞ்சம் துறைமுகம். இந்த துறைமுக பணிகள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    விழிஞ்சம் துறைமுக பகுதி பன்னாட்டு கடற்பாதையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த துறைமுகத்தில் இயற்கையாகவே 24 மீட்டர் ஆழம் கிடைக்கிறது. இதனால் இங்கு மிகப்பெரிய சரக்கு கப்பல்களையும் எளிதாக நிறுத்த முடியும்.

    இந்த துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவு 10 லட்சம் கொள்கலன்களாக இருக்கிறது. 2028-ம் ஆண்டு துறைமுக பணி முழுவதுமாக முடிந்தபிறகு விழிஞ்சம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்சம் துறைமுகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தின் அடையாளமாக மாற இருக்கும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் அவர், மறுநாள் காலை 11 மணிக்கு விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு செல்கிறார்.

    துறைமுகத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, துறைமுகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றுகிறார். இந்த விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று கேரளா வந்தது. அவர்கள் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மர்மநபரின் வெடிகுண்டு மிரட்டலால் கடந்த சில நாட்களாகவே கேரள மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி வருவதால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×