இந்தியா

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
- ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
- தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இதனை வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படு வதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்.
Next Story