என் மலர்

    இந்தியா

    போலீசார் கைகலப்பு: வீடியோ வெளியிட்ட உமர் அப்துல்லா
    X

    போலீசார் கைகலப்பு: வீடியோ வெளியிட்ட உமர் அப்துல்லா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • எந்த சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தினர் என்பதை விளக்க வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரமிக்கவர். போலீஸ் துறை இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து சண்டையிட்ட காஷ்மீர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு வருடந்தோறும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

    அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதியான நேற்று முதல்வரான உமர் அப்துல்லா நேற்று அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டையிடுவது போன்று போலீசார் தள்ளிவிட்டனர்.

    இது தொடர்பான வீடியோவை உமர் அப்துல்லா வெளியிட்டுள்ளார். மேலும் "இது நாள் உடல் ரீதியான அனுபவித்த போராட்டம். நான் சட்டத்திற்கு புறம்பாக அல்லது சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எந்தச் சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவதை தடுக்க சட்ட பாதுகாவலர்கள் முயற்சி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×