என் மலர்

    இந்தியா

    வக்பு சட்டத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்: மணிப்பூரில் பாதுகாப்பு படை குவிப்பு - ஊரடங்கு அமல்
    X

    வக்பு சட்டத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்: மணிப்பூரில் பாதுகாப்பு படை குவிப்பு - ஊரடங்கு அமல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
    • மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் வீடு எரிக்கப்பட்டது.

    முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.

    இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

    மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    குராய் குமிடோக் பஜாரில் இன்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

    மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதையும், பொதுமக்கள் துப்பாக்கிகள், வாள்கள், குச்சிகள், கற்கள் அல்லது பிற ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடைசெய்தது.

    Next Story
    ×