என் மலர்

    இந்தியா

    இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது: டிரம்ப் கருத்தை ஆமோதித்த ராகுல் காந்திக்கு பாஜக கடும் பதிலடி..!
    X

    இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது: டிரம்ப் கருத்தை ஆமோதித்த ராகுல் காந்திக்கு பாஜக கடும் பதிலடி..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்- டிரம்ப்
    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷியாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷியாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் ராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுராக் தாகூர் கூறுகையில் "உலகில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கருத்தை வெளியிடும்போதெல்லாம், ராகுல் காந்தி அதை பிடித்துக் கொள்கிறுார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவது காந்தியின் மனநிலையாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா "'செத்துப்போன பொருளாதாரம்' என்ற பழிச்சொல்லை எதிரொலிப்பதன் மூலம் ராகுல் காந்தி புதிய கீழ்த்தரமான நிலையை சந்தித்துள்ளார்.. இது இந்திய மக்களின் விருப்பங்கள், சாதனைகள் மற்றும் நல்வாழ்வுக்கு அவமானகரமான அவமானம்.

    ஆனால் நேர்மையாகச் சொல்லப் போனால், இங்கே உண்மையிலேயே 'இறந்து போன' ஒரே விஷயம் ராகுல் காந்தியின் சொந்த அரசியல், நம்பகத்தன்மை மற்றும் மரபு.

    இவ்வாறு மாள்வியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×